காதல் ஜோடி சில்மிஷம்; வாலாங்குளம் கழிப்பறைக்கு பூட்டு!

கோவை: வாலாங்குளம் பூங்கா கழிப்பறைக்குள் இளம் காதல் ஜோடி சில்மிஷத்தில் ஈடுபட்டதால் கழிப்பறைக்கு பூட்டு போடப்பட்டுள்ளது.

கோவை வாலாங்குளம் கரையோரத்தில் கடந்த 29ம் தேதி இரவு ஒரு பகுதியில் 20 வயது மதிக்கத்தக்க கல்லூரி மாணவரும், 18 வயது மதிக்கத்தக்க கல்லூரி மாணவியுமான காதல் ஜோடி அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தனர்.

அவர்கள் சிறிது நேரம் கழித்து அங்கு பொதுமக்கள் பயன்பாட்டுக்காக கட்டப்பட்டு இருந்த ஆண்கள் கழிப்பறைக்குள் சென்றனர்.

கதவை பூட்டி கொண்ட அந்த காதல் ஜோடி வெகு நேரமாக வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த காவலாளி கழிப்பறையின் ஆண்கள் பகுதிக்கு சென்றார். அப்போது கழிப்பறைக்குள் உள்ளே இருவரும் பேசும் சத்தம் கேட்டுள்ளது.

உடனே காவலாளி கதவை திறந்து பார்த்தார். அப்போது ஓரமாக கல்லூரி மாணவி பதட்டத்துடன் நின்று கொண்டிருந்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த காவலாளி அவர்கள் இருவரையும் வெளியே அழைத்து கடுமையாக எச்சரித்து அனுப்பி வைத்தார்.

இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் காதல் ஜோடி சில்மிஷத்தில் ஈடுபட்ட அந்த கழிப்பறையை பூட்டு போட்டு பூட்டினர்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, ஆட்கள் நடமாட்டம் குறைவாக இருக்கும் போது இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க கழிப்பறைக்கு பூட்டு போடப்பட்டுள்ளது.

ஆட்கள் அதிகளவில் இருக்கும் போதும், கழிப்பறையை பயன்படுத்துவோருக்கும் அங்குள்ள காவலாளிகள் மூலம் திறந்து விடப்படும், என்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

குடும்ப தலைவிகளுக்கு 2000, ஆண்களுக்கு கட்டணமில்லா பேருந்து- முதல்கட்ட தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்தார் EPS…

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக முதல்கட்ட தேர்தல் வாக்குறுதிகளை எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். தமிழ் நாட்டில் 17-ஆவது சட்டமன்றப் பேரவைக்கான பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதை முன்னிட்டு, அனைத்திந்திய அண்ணா திராவிட...

Video

Join WhatsApp