கோவை: மேற்கு மண்டல மாவட்டங்களில் தேர்தலையொட்டி 30 ஆயிரத்துக்கும் அதிகமான போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளதாக போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் எப்ரல் 23ம் தேதி நடைபெற உள்ளது. இதையடுத்து பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல மேற்கு மண்டலத்தில் உள்ள கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி என 8 மாவட்டங்களிலும் 30 ஆயிரத்துக்கும் அதிகமான போலீசார் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
Click here to read news பீளமேட்டில் ஜிபே மூலம் வாலிபரிடம் வழிப்பறி… மக்களே உஷார்!
இதுகுறித்து போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறியதவாது:-
மேற்கு மண்டலத்தில் உள்ள கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி என 8 மாவட்டங்களில் 14 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஒட்டு சாவடிகள் உள்ளது.
இந்த ஓட்டு சாவடிகளில் போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. அதற்காக மேற்கு மண்டல மாவட்டங்களில் 30 ஆயிரத்துக்கும் அதிகமான போலீசார் தேர்தல் பாதுகாப்பு பணிக்கு நியமிக்கப்பட உள்ளனர்.
Read Also: Coimbatore Crime News: மக்களே உஷார்… 77 நாட்களில் ரூ.15 கோடி மோசடி!
கர்நாடக, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் போலீசார் வரவழைக்கப்பட உள்ளனர். சிஆர்பிஎப், சிஐஎஸ்எப் போலீசாரும், ஊர்காவல் படையினர், முன்னாள் போலீசாருக்கும் தேர்தல் பணி வழங்கப்பட உள்ளது.
தேர்தல் அன்று ஓட்டு பதிவு முறையாக, சரியாக நடக்க அனைத்து தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

