கோவையில் மூதாட்டியிடம் ரூ.38.62 லட்சம் மோசடி செய்தவர்கள் கைது!

கோவை: பங்குச்சந்தையில் லாபம் தருவதாக கோவையில் மூதாட்டியிடம் ரூ.38.62 லட்சம் மோசடி செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

நவாவூர் பிரிவை சேர்ந்தவர் 64 வயது மூதாட்டி. இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு போனில் ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய மர்ம நபர்கள் தாங்கள் தெரிவிக்கும் பங்குச்சந்தை நிறுவனங்களில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்றுள்ளனர்.

இதனை நம்பி மூதாட்டி, மர்ம நபர்கள் கூறிய வங்கி கணக்குகளுக்கு பல்வேறு தவணையாக ரூ. 38 லட்சத்து 62 ஆயிரத்து 938ஐ அனுப்பி வைத்தார். அதன் பின்னர் மூதாட்டிக்கு எந்த ஒரு லாப பணமும் கிடைக்கவில்லை.

வெகு நாட்களாகியும் முதலீடு செய்த பணமும், லாப பணமும் கிடைக்காததால் சந்தேகம் அடைந்த மூதாட்டி மர்ம நபர்களை தொடர்பு கொண்டு கேட்டார். அப்போது அவர்கள் சரியான பதில் அளிக்காமல் இருந்து வந்தனர்.

தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த மூதாட்டி இதுகுறித்து கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

விசாரணையில் மூதாட்டியிடம் பண மோசடியில் ஈடுபட்டது கர்நாடகா மாநிலம் பெல்காம்மை சேர்ந்த தங்கராஜூ (47) மற்றும் சண்முக சுந்தரம் (50) ஆகியோர் என்பது கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் கர்நாடகா விரைந்து சென்று தங்கராஜூ, சண்முக சுந்தரம் ஆகியோரை கைது செய்தனர்.

தொடர்ந்து அவர்களை கோவை அழைத்து வந்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

கோவையில் சொகுசு காரில் பிடிபட்ட வெளிநாட்டு மதுபானங்கள்- தேர்தல் பறக்கும் படை அதிரடி…

கோவை: கோவையில் சொகுசு காரில் இருந்த வெளிநாட்டு மதுபானங்களை பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். ​தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததைத் தொடர்ந்து கோவை மாவட்டம் முழுவதும் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர சோதனை...

Video

தடாகம் பகுதியில் கும்பலாக சுற்றித்திரியும் காட்டுப்பன்றிகள்…

கோவை: தடாகம் அருகே வாழைமரங்களை சேதப்படுத்திய காட்டுப்பன்றிகள் கூட்டத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய தடாகம், கணுவாய், பன்னிமடை, தாளியூர், வரப்பாளையம், நஞ்சுண்டாபுரம் ஆகிய பகுதியில்...