BSNL நிறுவனத்திற்கு அபராதம்- கோவை மாநகராட்சி ஆணையாளர் உத்தரவு…

கோவை: கோவையில் BSNL நிறுவனம் உட்பட தனியார் நிறுவனங்களுக்கு 15 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Advertisement

கோவை மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் மத்திய அரசின் பிஎஸ்என்எல் நிறுவனம் உட்பட தனியார் நிறுவனங்களுக்கும் சேர்த்து 15 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளார்.

அதன்படி விளாங்குறிச்சி சாலை சேரன் மாநகர் பகுதியில் பொதுமக்களுக்கும் போக்குவரத்திற்கும் இடையூறாக மாநகராட்சியின் அனுமதியின்றி கேபிள் பதிப்பதற்கு குழி தோண்டிய மத்திய அரசின் பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு 5 லட்சம் ரூபாய் விதிக்கப்பட்டுள்ளது.

சாலையில் குப்பைகள் கொட்டப்பட்டதை தொடர்ந்து தனியார் ஒப்பந்த நிறுவனம் ஒன்றிற்கு ஐந்து லட்சம் ரூபாய் சாலையினை சரிவர சீரமைக்காத சூயஸ் குடிநீர் நிறுவனத்திற்கு 5 லட்சம் ரூபாய் என மொத்தம் 15 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Advertisement

பல்வேறு இடங்களில் நேரடி ஆய்வு மேற்கொண்ட கோவை மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் இந்த அபராதத்தை விதித்துள்ளார்.

Amazon Link 3
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் மாதத்திற்கான காளான் வளர்ப்பு பயிற்சி தேதி அறிவிப்பு…

கோவை: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் மாதத்திற்கான காளான் வளர்ப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. கோவையில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் பயிர் நோயியல் துறை சார்பாக ஒவ்வொரு மாதமும் காளான் வளர்ப்பு சம்பந்தமான ஒரு...

Video

தடாகம் அருகே உணவு தேடி வீட்டின் கேட்டை சாதுரியமாக திறந்த காட்டுயானை-வைரல் சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவையில் வீட்டின் கேட்டை லாவகமாக திறந்து உள்ளே சென்று அதே கேட் வழியில் வெளியே வந்த காட்டு யானையின் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் அதிகளவு வனவிலங்குகள்...