BSNL நிறுவனத்திற்கு அபராதம்- கோவை மாநகராட்சி ஆணையாளர் உத்தரவு…

கோவை: கோவையில் BSNL நிறுவனம் உட்பட தனியார் நிறுவனங்களுக்கு 15 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கோவை மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் மத்திய அரசின் பிஎஸ்என்எல் நிறுவனம் உட்பட தனியார் நிறுவனங்களுக்கும் சேர்த்து 15 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளார்.

அதன்படி விளாங்குறிச்சி சாலை சேரன் மாநகர் பகுதியில் பொதுமக்களுக்கும் போக்குவரத்திற்கும் இடையூறாக மாநகராட்சியின் அனுமதியின்றி கேபிள் பதிப்பதற்கு குழி தோண்டிய மத்திய அரசின் பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு 5 லட்சம் ரூபாய் விதிக்கப்பட்டுள்ளது.

சாலையில் குப்பைகள் கொட்டப்பட்டதை தொடர்ந்து தனியார் ஒப்பந்த நிறுவனம் ஒன்றிற்கு ஐந்து லட்சம் ரூபாய் சாலையினை சரிவர சீரமைக்காத சூயஸ் குடிநீர் நிறுவனத்திற்கு 5 லட்சம் ரூபாய் என மொத்தம் 15 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Advertisement

பல்வேறு இடங்களில் நேரடி ஆய்வு மேற்கொண்ட கோவை மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் இந்த அபராதத்தை விதித்துள்ளார்.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

பயணிகள் ஆட்டோவில் சரக்கு செல்வதா? கோவை ஆட்டோ டிரைவர்கள் குமுறல்!

கோவையில் பயணிகள் ஆட்டோக்களில் வணிக சரக்குகள் ஏற்றிச் செல்லப்படுவதை கட்டுப்படுத்த கோரி சரக்கு ஆட்டோ டிரைவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

Video

கோவையில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் புகுந்த பாம்பால் பரபரப்பு…

துடியலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் புகுந்த கண்ணாடி விரியன் பாம்பால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் தீயணைப்பு வீரர்கள் அதனை உயிருடன் பிடித்தனர்.