சின்னத் தடாகத்தில் அதிக லாபம் தரும் தீபாவளி ஏலச்சீட்டு என்று தொழிலாளர்கள் பணம் அபேஸ்!

கோவை: சின்னத் தடாகம் அதிக லாபம் தரும் தீபாவளி ஏலச்சீட்டு என்ற பெயரில் தொழிலாளர்களின் பணத்தை மோசடி செய்த இருவரை போலீசார் கைது செய்தனர்.

Advertisement

மதுரை ஒத்தக்கடை மேலக்குடியைச் சேர்ந்தவர் மலைச்சாமி மற்றும் அவரது சகோதரர் ராஜ்குமார். இவர்கள் கோவை சின்ன தடாகம் பகுதியில் கடந்த 2015 ஆம் ஆண்டு செல்போன் விற்பனை கடை வைத்து இருந்தனர்.

இந்த சகோதரர்கள் இருவரும், செங்கல் சூளையில் வேலை பார்த்து வந்த தொழிலாளர்களை அணுகி, தீபாவளி சீட்டு நடத்துவதாகவும், வாரம் ரூபாய் 2,000 வீதம் 52 வாரங்களுக்கு கட்டினால் நல்ல லாபம் தருவதாகவும் கூறி உள்ளனர்.

இதை நம்பி 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணம் செலுத்தினர். ஆனால், காலக்கெடு முடிந்த பிறகும் மலைச்சாமி யாருக்கும் முதிர்வு தொகை ரூ.50 லட்சத்தைக் கொடுக்கவில்லை, சகோதரர்கள் இருவரும் பணத்தை கொடுக்காமல் 2016ம் ஆண்டு மதுரைக்குச் சென்றுவிட்டனர்.

Advertisement

இதுகுறித்து பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் போலீசில் புகார் அளித்தனர். புகாரை விசாரித்த போலீசார் பணத்தைத் திருப்பித்தர 2 ஆண்டுகள் அவகாசம் அளித்தனர்.

ஆனால், பணத்தை திருப்பித்தராமல் மோசடி செய்தனர். இதனிடையே இருவரையும் கைது செய்த கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் சகோதரர்கள் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Advertisement

Amazon Link 3
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

சஸ்பெண்ட் செய்ததை வாபஸ் பெறுக- வார்டு மக்களுடன் கோவை கவுன்சிலர் தர்ணா…

கோவை: தன்னை சஸ்பெண்ட் செய்ததை திரும்ப பெற வேண்டும் என்று வார்டு மக்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டார் காங்கிரஸ் கவுன்சிலர் காயத்ரி... தன்னை களங்கப்படுத்தியதாக கூறி மாமன்ற கூட்டத்திலிருந்து சஸ்பெண்ட் செய்ததை திரும்ப பெற வேண்டும்...

Video

கோவையில் செய்த தவறை உணர்ந்த இளம்பெண்- வீடியோ காட்சிகள்…

கோவை காந்திபுரம் செல்போன் கடையில் வாடிக்கையாளர் போல் நடித்து ஐபோன் 13-ஐ திருடிச் சென்ற இளம்பெண், சிசிடிவி காட்சிகள் வைரலானதைத் தொடர்ந்து தனது தவறை ஒப்புக்கொண்டு செல்போனை மீண்டும் கடையில் ஒப்படைத்தார்.