மழையையும் பொருட்படுத்தாமல் கோவையில் காவல்துறை அணிவகுப்பு- பொது மக்களிடையே பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சி…

கோவை: கோவையில் கொட்டும் மழையிலும் மாநகர காவல் ஆணையர் தலைமையில், அணிவகுப்பு மேற்கொள்ளப்பட்டது.

Advertisement

தமிழ்நாட்டில் வருகிற ஏப்ரல் 23ம் தேதி 234 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி அனைத்து மாவட்டங்களுக்கும் மத்திய சிறப்பு காவல் படையினர், துணை ராணுவப்படையினர் உள்ளிட்டோர் வருகை தந்துள்ளனர்.

தொகுதி வாரியாக இவர்கள் பொதுமக்களிடையே பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்தும் வகையில் கொடி அணிவகுப்புகளை நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கோவை மாநகர காவல்துறை சார்பில் காவலர்கள், காவல்துறை ரோந்து வாகனங்கள் பங்கேற்ற அணிவகுப்பு நடைபெற்றது.

Advertisement

கோவை காந்திபார்க் பகுதியில் இருந்து வனக்கல்லூரி வரை நடைபெற்ற இந்த அணிவகுப்பை மாநகர காவல் ஆணையர் கண்ணன் ஐபிஎஸ் துவக்கி வைத்தார்.

Advertisement

இதில் துணை ஆணையர்கள், இணை ஆணையர்கள், ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், காவலர்கள் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

திடீரென மழைப்பொழிவு ஏற்பட்ட பொழுதிலும் போலீஸ் இசை முழங்க, கொட்டும் மழையை பொருட்படுத்தாமல் 70க்கும் மேற்பட்ட நான்கு சக்கர காவல்துறை ரோந்து வாகனங்கள் மற்றும் 50க்கும் மேற்பட்ட இருசக்கர ரோந்து வாகனங்கள் இந்த அணிவகுப்பில் பங்கேற்றனர்.

Amazon Link 3
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

கோவை வரும் துணை ஜனாதிபதி- ட்ரோன் பறக்க தடை…

கோவை: துணை குடியரசு தலைவர் வருகையால் கோவையில் மூன்று தினங்களுக்கு ட்ரோன் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. கோவை மற்றும் திருப்பூர் செல்வதற்காக துணை குடியரசு தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் நாளை வருகை புரிய உள்ளதை முன்னிட்டு...

Video

அன்னூரில் சிறுத்தை நடமாட்டம்- சிசிடிவி காட்சிகள்…

கோவை: அன்னூர் பகுதியில் தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டுள்ளது. கோவை அருகே நள்ளிரவில் ஊருக்கு அருகில் உள்ள தோட்டம் ஒன்றில் உலா வந்த சிறுத்தையின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கோவை மாவட்டம்,...