தவெகவிற்கு ஆதரவு ஏன்? வெளிப்படையாக பேசிய எஸ்.பி.வேலுமணி…

கோவை: திமுக எதிர்ப்பு என்பதால் தான் தவெகவிற்கு ஆதரவளித்தோம் என எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

Advertisement

கோவை புதூர் பகுதியில் உள்ள மண்டபத்தில் அதிமுக தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதி செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது இதில் அதிமுக கோவை புறநகர் மாவட்ட செயலாளர் செம வேலுச்சாமி, தொண்டாமுத்தூர் சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அதிமுக அமைச்சருமான எஸ்பி வேலுமணி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி, வேலுச்சாமி அண்ணன் தனக்கு பொறுப்பு வழங்கியது பற்றி வருத்தப்பட வேண்டாம் என்று என்னிடம் கேட்டுக் கொண்டார் என்றும் தனக்கு எந்த ஒரு வருத்தமும் இல்லை என்று தெரிவித்தார். எங்களைப் பொறுத்தவரை தலைமைக்கும் எங்களுக்கும் பொதுச்செயலாளர்க்கும் எங்களுக்கும் தான் பிரச்சனை அதுவும் ஆரோக்கியமான பிரச்சனை என்று தெரிவித்தார்.

வேலுச்சாமிக்காக பணியாற்றியவர்கள் இங்கு இருக்கிறார்கள் என்றார். கோவை செம்மொழி மாநாடு நடக்கும்பொழுது எதிர்க்கட்சியாக இருந்த நாங்கள் நடத்திய போராட்டம் ஆட்சி மாற்றத்திற்கு வழி வகுத்தது என்று சுட்டிக்காட்டினார்.

Advertisement

2014 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் வரும்பொழுது வேலுச்சாமி கோவை மாவட்ட பொறுப்பில் பணியாற்றியார் என்றும் நான் பொள்ளாச்சியில் பணியாற்றினேன் என்றும் ஆனால் அப்பொழுது ஜெயலலிதா என்னை அழைத்து கோவைக்கும் சேர்த்து என்னையே பார்த்துக் கொள்ளும்படி கூறினார்கள் அப்பொழுதே அது பற்றி வேலுசாமியிடம் நான் பேசியிருக்கிறேன் என்று தெரிவித்தார்.

எடப்பாடி பழனிச்சாமி அவர்களை பொதுச்செயலாளர் ஆக்குவதற்கும் முதலமைச்சர் ஆக்குவதற்கும் நாங்கள் அனைவரும் இணைந்து பணியாற்றினோம் என்று கூறிய அவர் தற்பொழுது எங்களது கோரிக்கைகளை தான் பொதுச் செயலாளரிடம் முன்வைக்கிறோம் என்று கூறினார். கட்சி முக்கியம் கட்சி நன்றாக இருக்க வேண்டும் என்பதில் எங்களுக்கு மாற்றுக் கருத்து இல்லை ஆனால் அதே சமயம் எதிர்க்கட்சியாக இருந்த இந்த கட்சி ஏன் ஆளுங்கட்சியாக வரவில்லை? அதனை பற்றி பேசுவதற்காக தான் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருவதாக தெரிவித்தார்.

Advertisement

முதல் முதலில் பிரச்சனை எங்கு வருகிறது என்றால் திமுகவுடன் அதிமுக செல்ல வேண்டும் என்று முடிவெடுக்கும் போது தான் பிரச்சனை வருகிறது என்றும் எங்களை தவெக க்கு ஆதரவு ஓட்டு போட்ட துரோகி என்று கூறுகிறார்கள் திமுக எதிர்ப்பு என்ற வகையில் தான் தமிழக வெற்றி கழகத்திற்கு ஓட்டு போட்டோம் என்றும் என்றும் ஆனால் கட்சியை விட்டு நாங்கள் செல்லவில்லை என்று தெரிவித்தார். அதன் பிறகு பொதுச் செயலாளருடன் இணைந்து தான் பணியாற்றி வருவதாகவும் அதில் சில பதவிகளை கொடுக்கும் பொழுது தான் கருத்து வேறுபாடுகள் வந்ததாகவும் தெரிவித்தார்.

கோவை திருப்பூர் நீலகிரி ஆகிய மாவட்டங்களில் உள்ளூரில் எங்களுக்கு பிரச்சனை இல்லை உரிமையுடன் தலைமையிடம் போராடி வருவதாக தெரிவித்தார்.

பொள்ளாச்சி ஜெயராமன் சில தவறான வேலைகளை செய்தார் அப்பொழுது கூட அதிமுக ஐடி வெங்கிடம் அவரைப் பற்றியும் அவரது மகன் பற்றியும் எதுவும் விமர்சிக்க கூடாது என்று தெரிவித்திருக்கிறேன் என்று கூறினார். பொள்ளாச்சி ஜெயராமன் மகன் மீது பிரச்சனை வரும் பொழுது நாங்கள் தான் மகளிர் உடன் சென்று போராட்டம் செய்தோம் நாம் வளர்த்த பையன் தவறாக செல்ல மாட்டான் என்று நினைத்தோம் ஆனால் அந்தப் பையன் தவறாக செல்ல வேண்டிய சூழ்நிலை அதைப் பற்றி நான் எடப்பாடி பழனிச்சாமி அவரிடமே பேசினேன். ஓபிஎஸ் இங்கிருந்து செல்லும் பொழுது பொள்ளாச்சி ஜெயராமன் அவரை அழைத்து வந்தார் அப்படி என்றால் அவர் யோக்கியமாக இருந்தாரா? அவர் செய்ததெல்லாம் எங்களுக்கு தெரியாதா? என்றும் காட்டமாக பேசினார். பொள்ளாச்சியை சேர்ந்த சிலர் திமுக விடவும் பேசினார்கள் என்றும் பொள்ளாச்சி ஜெயராமனின் தாயார் மறைவிற்கு செல்லும் பொழுது அவரது வீட்டில் நியாயமாக நடந்ததா என்றும் கேள்வி எழுப்பினர்.

நாங்கள் திமுக எதிர்ப்பு என்பதில் உறுதியாக இருக்கிறோம் என்றும் திமுக எதிர்ப்பில் தான் தமிழக வெற்றி கழகம் அந்த அடிப்படையில் தான் நாங்கள் அவ்வாறு செயல்பட்டோம் என்று கூறிய அவர் எங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றால் திமுகவுடன் செல்லலாம் என்று கூறியவர்கள் மீது யார் நடவடிக்கை எடுப்பது என்றும் கேள்வி எழுப்பினார். பொள்ளாச்சி ஜெயராமன் வயது முதிர்வு இல்லாமல் தேவையில்லாததை செய்து கொண்டிருக்கிறார் என்றும் உங்களைப் பற்றியும் நீங்கள் என்னென்ன செய்தீர்கள் என்பது பற்றியும் எங்களுக்கு தெரியும் என்று தெரிவித்தார். மேலும் பொள்ளாச்சி ஜெயராமன் அவரது மகன் பற்றி சமூக வலைத்தளங்களில் எந்த ஒரு கருத்துக்களையும் பதிவிட வேண்டாம் என்று தெரிவித்தார்.

பொதுக்குழு கூட்ட வேண்டும் கமிட்டி போட வேண்டும் மீண்டும் பழைய பதவிகள வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகள் தான் நாங்கள் வைத்து வருவதாக தெரிவித்தார். நாங்கள் எல்லாம் இத்தனை ஆண்டுகள் பணியாற்றி விட்டோம் அடுத்த தலைமுறை வரவேண்டும் அதில் மாற்றுக் கருத்து இல்லை என்று தெரிவித்தார். மாவட்டங்களுக்குள் எந்த ஒரு பிரச்சனையும் இல்லை என்று கூறிய அவர் தலைமை தான் ஆய்வுக் கூட்டங்களில் நடத்தி ஏன் ஆளுங்கட்சியாக வரவில்லை என்பதை ஆராய வேண்டும் என கேட்டுக் கொண்டார். அதிமுக நன்றாக இருக்க வேண்டும் என்றும் ஆனால் சிலர் சுயநலமாக செயல்படுகிறார்கள் தேர்தலின் பொழுது அவர்கள் எங்கள் வீட்டை இவருக்கு வந்தது எல்லாம் தெரியாதா என்றும் மனசாட்சி இல்லாமல் பேசுவதை நிறுத்திக் கொள்ளுங்கள் என்றும் கூறினார்.

இந்த தொண்டாமுத்தூர் தொகுதியில் மட்டும் நடைபெறும் கூட்டத்தில் நான் பங்கேற்றதற்கு காரணம் என்னவென்றால் நான் அவர்கள் அளித்த பொறுப்பை ஏற்றுக் கொள்ளவில்லை நான் ஒரு உறுப்பினராக தான் இங்கு கலந்து கொள்கிறேன் இந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் என்ற பொறுப்பில் பேசிக் கொண்டிருக்கிறேன் அதேசமயம் வேலுச்சாமி அவருடைய பொறுப்புக்கு எப்பொழுதும் மரியாதை அளிப்போம் என்று தெரிவித்தார்.

Amazon Link 1
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

எஸ்.பி வேலுமணியை அருகில் வைத்து கொண்டு செ.ம.வேலுச்சாமி கூறிய கருத்துக்கள்…

கோவை: திமுக தவெக வை டார்கெட் செய்யுங்கள் என அதிமுக கோவை புறநகர் மாவட்ட செயலாளர் செம வேலுச்சாமி எஸ்.பி.வேலுமணியை அருகில் வைத்து கொண்டு தெரிவித்துள்ளார். கோவை புதூர் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில்...

Video

கோவையில் செய்த தவறை உணர்ந்த இளம்பெண்- வீடியோ காட்சிகள்…

கோவை காந்திபுரம் செல்போன் கடையில் வாடிக்கையாளர் போல் நடித்து ஐபோன் 13-ஐ திருடிச் சென்ற இளம்பெண், சிசிடிவி காட்சிகள் வைரலானதைத் தொடர்ந்து தனது தவறை ஒப்புக்கொண்டு செல்போனை மீண்டும் கடையில் ஒப்படைத்தார்.