தடாகத்தில் மீண்டும் வேட்டையன்- மக்கள் அச்சம்…

கோவை: தடாகம் நஞ்சுண்டாபுரம்
மீண்டும் வலம் வந்த வேட்டையன்
காட்டுயானையால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

Advertisement

கோவை தடாகம் நஞ்சுண்டாபுரம் பகுதியில் நள்ளிரவில் உணவு தேடி குடியிருப்பு பகுதிக்குள் வலம் வந்த வேட்டையன் என்ற ஒற்றை காட்டு யானை செடி, மரங்களை தின்று சேதப்படுத்தியது. பின்னர் தகவல் அறிந்து வனத்துறையினர் காட்டுக்குள் விரட்டி உள்ளனர்.

கோவை மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளான ஆனைகட்டி மலைப்பகுதியில் காட்டு யானைகள், சிறுத்தைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டம் உள்ளன. காட்டுயானைகள் அடிக்கடி வனப்பகுதியில் இருந்து வெளியேறி ஊருக்குள் புகுகிறது.

இந்த நிலையில் கோவை தடாகம் நஞ்சுண்டாபுரம் பகுதியில் நள்ளிரவு வேட்டையன் என்ற காட்டு யானை உணவு தேடி குடியிருப்புப் பகுதிக்குள் நுழைந்தது. யானையக் கண்டதும் அங்கிருந்த நாய்கள் குரைத்தன. யானை வீட்டின் முன் வளர்க்கப்பட்டிருந்த வாழை, கொய்யா உள்ளிட்ட மரங்களை சாப்பிட்டது.

Advertisement

இது குறித்து அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர், குடியிருப்புப் பகுதிக்குள் நின்றிருந்த யானையை மீண்டும் காட்டுக்குள் விரட்டினர்.

Flipkart Link 2
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

முதல்வர் பேச்சை கண்டித்து கோவையில் திமுக ஆர்ப்பாட்டம்- விஜய்க்கு சம்மட்டி அடி கொடுப்போம் என தெரிவிப்பு …

கோவை: முதல்வரின் சட்டசபை பேச்சை கண்டித்து ஒருங்கிணைந்த கோவை மாவட்ட திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர்கள் துரை செந்தமிழ் செல்வன், தொண்டாமுத்தூர் ரவி, தளபதி முருகேசன் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற...

Video

தொழிலாளர்கள் கொட்டகையை சேதப்படுத்திய காட்டுயானை- கோவை அருகே பரபரப்பு…

கோவை: கட்டிட தொழிலாளர்கள் தங்கியிருந்த தகர கொட்டகையை சேதப்படுத்திய ஒற்றை காட்டு யானையால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை துடியலூர் அடுத்துள்ள கதிர் நாயக்கன்பாளையம் பகுதியில் நேற்று நள்ளிரவில் குடியிருப்புக்குள் புகுந்து வடமாநில தொழிலாளர்கள் தங்கியிருந்த...