மேட்டுப்பாளையம் சார் பதிவாளர் அலுவலகத்தில் 22 ஜோடிகளுக்கு டும்… டும்… டும்…!

கோவை: மேட்டுப்பாளையம் சார் பதிவாளர் அலுவலகத்தில், 22 இலங்கைத் தமிழர் ஜோடிகளின் திருமணம் பதிவு செய்யப்பட்டது.

மறுவாழ்வு முகாம்களில் வசித்து வரும் இலங்கைத் தமிழர்களின் திருமணங்களை பதிவு செய்வதற்காக சிறப்பு முகாம் நடத்த தமிழக அரசு அறிவுறுத்தி இருந்தது.

Advertisement

இதையடுத்து, மேட்டுப்பாளையம் வேடர் காலனி பகுதியில் உள்ள மறுவாழ்வு முகாம்களில் வசித்து வரும் இலங்கை தமிழர்களான 22 ஜோடிகளின் திருமணம், மேட்டுப்பாளையம் சார் பதிவாளர் அலுவலகத்தில், சார் பதிவாளர் ராமமூர்த்தி தலைமையில் பதிவு செய்யப்பட்டது.

இதற்காக மறுவாழ்வு முகாமிலிருந்து சார் பதிவாளர் அலுவலகம் வரை, இந்த ஜோடிகளை அழைத்து வருவதற்கான வாகன வசதி,

மேலும் அவர்களுக்கு சாப்பாடு, குடிநீர் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் சார் பதிவாளர் ராமமூர்த்தி செய்து கொடுத்தார்.

இதனால் பதிவு திருமணம் செய்து கொண்ட ஜோடிகள் மணம் நெகிழ்ந்தனர்.

Recent News

எடப்பாடி பழனிச்சாமியின் விமர்சனங்கள்- ஒரே வரியில் பதில் அளித்த செங்கோட்டையன்..

கோவை: எடப்பாடி பெரிய தலைவர் அல்ல, அவருக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். சென்னை செல்வதற்காக கோவை விமான நிலையத்திற்கு செங்கோட்டையன் வருகை புரிந்தார். அப்போது அவரிடம் செய்தியாளர்கள் பல்வேறு...

Video

Join WhatsApp