கோவையில் சோகம்; லிப்டில் சென்ற இளைஞர் பரிதாப பலி!

கோவை: கோவையில் லிப்ட் வயர் அறுந்து விழுந்த விபத்தில் கடை ஊழியர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

ஒப்பணக்கார வீதியை அடுத்த ரங்கே கவுண்டர் பகுதியில் மூன்று மாடி கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடத்தில் ஆசிக் ஸ்டோர் என்ற மளிகை சாமான் விற்பனையகம் செயல்பட்டு வருகிறது.

இந்த கட்டிடத்தில் லிப்ட் உள்ள நிலையில், ஊழியர் சுரேஷ்குமார் என்பவர் லிப்டில் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக லிப்ட் வயர் அறுந்து விழுந்தது.

இதில் சுரேஷ்குமாருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இந்த விபத்தில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவலறிந்த கடை வீதி போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று, சுரேஷ்குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

கோவை செய்திகள், அரசு, ரயில்வே மற்றும் மின்தடை அறிவிப்புகளுக்கு எங்கள் வாட்ஸ்-ஆப் குழுவில் இணைவீர் 👈

Advertisement

மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மக்கள் நெரிசல் மிகுந்த இடத்தில் லிப்ட் வயர் அறுந்து ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி தொழிலாளர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Recent News

துணை ஜனாதிபதி பாதுகாப்பு விஷயத்தில் போலீசார் கூறுவது ஏற்க தக்கது அல்ல- வானதி சீனிவாசன்…

கோவை: துணை ஜனாதிபதி பாதுகாப்பு வளையத்திற்குள் அத்துமீறி நுழைந்த வாலிபர்கள் விஷயத்தில் போலீஸ் கூறுவது ஏற்கக் கூடியது அல்ல என்று வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.கோவை சாய்பாபா காலனி பகுதியில் நடைபெற்ற சாலையோர வியாபாரிகள்...

Video

மருதமலையில் விமர்சையாக நடைபெற்ற சூரசம்ஹாரம்

கோவை: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சூரசம்ஹாரம் வெகு விமர்சியாக நடைபெற்றது.கந்தர் சஷ்டி விழாவில் முக்கிய நிகழ்வான முருகன் சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்காரம் நிகழ்ச்சி இன்று அனைத்து முருகன் கோவில்களிலும் வெகு...
Whatsapp Group