துவங்கிய புரட்டாசி மாதம்- கோவையில் மீன் விலை குறைந்தது

கோவை: புரட்டாசி மாதம் ஆரம்பித்ததை தொடர்ந்து கோவையில் மீன் விலை குறைந்துள்ளது.

புரட்டாசி மாதம் ஆரம்பித்ததை எடுத்து பொதுமக்களில் பலர் விரதம் இருப்பதால் அசைவ உணவுகளை சாப்பிட மாட்டார்கள். இதனால் இறைச்சி கடைகள் மீன் கடைகளில் கூட்டம் வழக்கத்தை விட தற்பொழுது குறைந்துள்ளது.

கோவை உக்கடம் மீன் மார்க்கெட்டில் மீன்களின் விலை கணிசமாக குறைந்து உள்ளது. மீன் வாங்குவதற்கும் குறைவான மக்களே வருகை புரிகின்றனர் அவ்வாறு வரும் மக்கள் விலை குறைவாக இருப்பதால் அதிகமான மீன்களை வாங்கி செல்கின்றனர். இங்கு தமிழ்நாடு கேரளா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து மீன்கள் அதிக அளவு வந்தாலும் மீன்களின் விலை கணிசமாக குறைந்துள்ளது.

குறிப்பாக கிலோ மத்தி 70 ரூபாய், அயிலை 80 ஆகிய பல்வேறு மீன்கள் ஒரு கிலோ 200 ரூபாய்க்கும் கீழ் விற்பனை செய்யப்படுகிறது. வஞ்சரம் போன்ற மீன்கள் 300 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

புரட்டாசி மாதம் ஆரம்பித்ததால் ஒரு மாதம் வியாபாரம் மந்தமாக தான் இருக்கும் என்றும் மீன் வரத்து அதிகமாக இருந்தாலும் வாங்குவதற்கு மக்கள் அதிகமாக வர மாட்டார்கள் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

கிராமப்புற இளைஞர்களுக்கு அசத்தல் வேலைவாய்ப்பு கொடுக்கும் SKPSR திறன் மையம்!

கிராமப்புற இளைஞர்கள், பெண்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் நோக்கில் உடுமலையில் புதிய தொழிற்கல்வி திறன் மையம் தொடங்கப்பட்டுள்ளது.

Video

கோவையில் ஒருவரை தாக்குவதற்கு துரத்திய காட்டுயானை- சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவை கதிர் நாயக்கன்பாளையம் பகுதியில் காட்டு யானை ஒருவரை தாக்குவதற்காக விரட்டும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சாலை கதிர் நாயக்கன்பாளையம் பகுதியில் ஒற்றைக் காட்டுயானை அட்டகாசம் அதிகமாக...