பிஎஸ்ஜி கலை அறிவியல் கல்லூரி பட்டமளிப்பு விழா; 2,150 மாணவர்கள் பட்டம் பெற்றனர்!

கோவை: பி.எஸ்.ஜி கலை அறிவியல் கல்லூரியில் இன்று பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில், இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளில் 2,150 மாணவர்கள் பட்டம் பெற்றனர்.

அவினாசி சாலை சிட்ரா பகுதியில் பிஎஸ்ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியின் 38வது பட்டமளிப்பு விழா கல்லூரி கலையரங்கத்தில் இன்று நடைபெற்றது.

இந்த விழாவில் கல்லூரி முதல்வர்
செங்குட்டுவன் வரவேற்று, ஆண்டறிக்கை வாசித்தார். தொடர்ந்து, பி.எஸ்.ஜி அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் கோபாலகிருஷ்ணன் விழாவைத் தொடங்கி வைத்தார்.

இதில், தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்ற உறுப்பினர் செயலர் வின்சென்ட் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு 1,110 மாணவர்களுக்கு இளங்கலைப் பட்டம், 1,040 மாணவர்களுக்கு முதுநிலைப் பட்டம் என மொத்தம் 2,150 பேருக்கு பட்டங்கள் வழங்கினார்.

மேலும், முதல் மதிப்பெண் பெற்ற 32 மாணவர்களுக்குப் பதக்கங்களும், சான்றிதழ்களையும் வழங்கப்பட்டன.

தொடர்ந்து, மாணவர்கள் மத்தியில் வின்சென்ட் பேசுகையில், “
தேசிய தரவரிசையில் 10ஆவது இடத்தைப் பிடித்து, இந்தியாவின் முதன்மையான தன்னாட்சி நிறுவனங்களில் ஒன்றாக தனது நிலையை பி.எஸ்.ஜி கலை அறிவியல் கல்லூரி மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது பாராட்டத்தக்கது. உண்மையான தலைமை என்பது பட்டங்களால் வரையறுக்கப்படுவதில்லை. மாறாக, முன்முயற்சி, இரக்கம் மற்றும் சமூக விளைவுகளால் வரையறுக்கப்படுகிறது.” என்றார்.

விழாவின் நிறைவில் ஊட்டச்சத்துவியல் துறைத்தலைவர் உத்ரா நன்றியுரை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பேராசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர் கலந்து கொண்டனர்.

Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

கிராமப்புற இளைஞர்களுக்கு அசத்தல் வேலைவாய்ப்பு கொடுக்கும் SKPSR திறன் மையம்!

கிராமப்புற இளைஞர்கள், பெண்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் நோக்கில் உடுமலையில் புதிய தொழிற்கல்வி திறன் மையம் தொடங்கப்பட்டுள்ளது.

Video

கோவையில் ஒருவரை தாக்குவதற்கு துரத்திய காட்டுயானை- சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவை கதிர் நாயக்கன்பாளையம் பகுதியில் காட்டு யானை ஒருவரை தாக்குவதற்காக விரட்டும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சாலை கதிர் நாயக்கன்பாளையம் பகுதியில் ஒற்றைக் காட்டுயானை அட்டகாசம் அதிகமாக...