ப்ரோசோன் மாலில் டைனோசர் உலகம்- குழந்தைகளுடன் சென்று மகிழுங்கள்

கோவை: கோவை ப்ரோசோன் மாலில் டைனோசர் உலகம் குழந்தைகளுக்காகவே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கோவை ப்ரோசோன் மாலில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு குழந்தைகளை உற்சாகப்படுத்தும் டைனோசர் உலகம், பல்வேறு விளையாட்டுகள் ஆகியவை துவங்கியுள்ளன.

வருகின்ற இருபதாம் தேதி தீபாவளி பண்டிகை ஆனது கொண்டாடப்பட உள்ள நிலையில் கோவை சரவணம்பட்டி சாலையில் உள்ள ப்ரோசோன் மாலில் ஒளிநாள் கொண்டாட்டம் தமிழ்நாட்டில் முதல்முறையாக டைனோசர் உலகம், பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் ஆகியவை நடைபெறுகின்றன. இங்கு நடத்தப்படும் போட்டிகளில் பங்கேற்று 35 லட்சம் ரூபாய் வரையிலான பரிசுகளை பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக குழந்தைகளை கவரும் வண்ணம் தமிழ்நாட்டில் முதல்முறையாக ப்ரோசோன் டைனோசர் உலகம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காடு போன்ற அமைப்பில் அசையும் டைனோசர்கள், பெரிய அளவிலான டைனோசர் முட்டை ஆகியவை வைக்கப்பட்டுள்ளது குழந்தைகளுடன் வரும் பெற்றோர்கள் உற்சாகமாக அதனை பார்த்து புகைப்படங்கள் எடுத்து மகிழ்கின்றனர்.

மேலும் குழந்தைகளுக்கான விளையாட்டு போட்டிகள் இளம் வயதினருக்கான விளையாட்டுப் போட்டிகள் ஆகியவையும் நடத்தப்படுகின்றன. அதுமட்டுமின்றி அக்டோபர் 18 மற்றும் 19 ஆம் தேதி ஆகிய இரண்டு தினங்களில் ஷாப்பிங் நேரம் நீட்டிக்கப்பட்டு மேலும் அந்த இரண்டு தினங்களுக்கு பார்க்கிங் கட்டணம் எதுவும் இல்லை.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

தேர்தல் நடத்தை விதிகள்- திருமண மண்டபங்கள், அச்சகங்கள் என்ன செய்ய வேண்டும் என்று எடுத்துரைத்த ஆட்சியர்…

கோவை: தேர்தல் நடத்தை விதிகள் தொடர்பாக திருமண மண்டப உரிமையாளர்கள் பேனர் அச்சகங்கள் சங்கத்தினருடன் மாவட்ட ஆட்சியர் ஆலோசனைக் கூட்டம் மேற்கொண்டார். கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திருமண மண்டப உரிமையாளர்கள், பேனர் பிளக்ஸ்...

Video

கோவையில் ஒருவரை தாக்குவதற்கு துரத்திய காட்டுயானை- சிசிடிவி காட்சிகள்…

கோவை கதிர் நாயக்கன்பாளையத்தில் ஒற்றை காட்டு யானை கட்டிட தொழிலாளியை விரட்டிய சிசிடிவி காட்சி பரபரப்பை ஏற்படுத்தி, வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.