கோவையில் பரிதாபம்; தலைமுடியால் உயிரிழந்த பெண்!

கோவை: இயந்திரத்தில் தலைமுடி சிக்கியதில் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் கோவையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

பீளமேடு அருகே உள்ள காந்தி மாநகர் பகுதியைச் சேர்ந்தவர் வின்சென்ட். இவரது மனைவி ஆனந்த ஜோதி (50). இவர் பீளமேடு பகுதியில் உள்ள ஒரு மரம் அறுக்கும் ஆலையில் வேலை பார்த்து வந்தார்.

நேற்று முன்தினம் பணியில் இருந்த போது எதிர்பாராத விதமாக ஆனந்த ஜோதியின் தலைமுடி மரம் அறுக்கும் எந்திரத்தில் உள்ளே சிக்கி உள்ளது.

இதனால் மரம் அறுக்கும் எந்திரம் வேகமாக இழுத்ததில் அவரது தலையில் படுகாயமடைந்தார். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த சக ஊழியர்கள் ஜோதியை மருத்துவமனையில் அனுமதித்தனர்.

ஆனால் அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

மேட்டுப்பாளையம் அருகே 4 லட்சம் பறிமுதல்…

கோவை: மேட்டுப்பாளையம் அருகே ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்பட்ட 4 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. மேட்டுப்பாளையம் அருகே கூடலூர் கவுண்டம்பாளையம் பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய வாகன சோதனையில் உரிய...

Video

தடாகம் பகுதியில் கும்பலாக சுற்றித்திரியும் காட்டுப்பன்றிகள்…

தடாகம் அருகே வரப்பாளையத்தில் இரவு நேரத்தில் ஊருக்குள் புகுந்த காட்டுப்பன்றிகள் கூட்டம் வாழைமரங்கள், விவசாய நிலங்களை சேதப்படுத்திய சிசிடிவி காட்சிகள் வெளியாகின.