கோவை: துடியலூர் அருகே ஊருக்குள் காட்டு யானை நடமாடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.
கோவை துடியலூர் அடுத்த கதிர் நாயக்கன்பாளையம் பகுதியில் ஒற்றை காட்டி யானை இரவு நேரத்தில் ஊருக்குள் நடமாடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ள நிலையில் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகளவு உள்ளது. காட்டு யானைகள் வனப்பகுதிகளில் இருந்து வெளியேறி ஊருக்குள் உலாவும் நிலையில் சில சமயங்களில் சேதங்களையும் விளைவித்து செல்கின்றன.
இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களாக துடியலூர் அடுத்த கதிர் நாயக்கன்பாளையம் பகுதியில் ஒற்றைக் காட்டுயானை ஊருக்குள் உலாவி வருகிறது. கதிர் நாயக்கன்பாளையம் கிரீன் பீல்ட் பகுதியில் இரவு நேரத்தில் ஒற்றை காட்டுயானை ஊருக்குள் உலாவி வருகிறது.
தற்பொழுது அதன் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ள நிலையில் இரவு நேரங்களில் ஊர் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.




