கோவை: கோவை-தன்பாத் இடையே நாளை இயக்கப்படும் ரயில் 8 மணி நேரம் தாமதமாக புறப்படும் என்று தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:-
Advertisement

கோயம்புத்தூர் ஜங்ஷனில் இருந்து தன்பாத் வரை செல்லும் வாராந்திர சிறப்பு ரயில் (எண்: 03680) வரும் ஜூன் 24ம் தேதி ம் காலை 7.50 மணிக்கு புறப்படவிருந்தது.
ஆனால், இணைப்பு ரயில் தாமதம் காரணமாக, இந்த ரயில் அன்றைய நாளில் மாலை 4.15 மணிக்கு (16.15 மணி) புறப்படும் என ரயில்வே துறை அறிவித்துள்ளது. இதனால் மொத்தம் 8 மணி 25 நிமிடங்கள் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இந்த ரயில், திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை வழியாக தன்பாத் நோக்கிச் செல்லும். பயணிகள் முன்னதாகவே தகவல் அறிந்து பயண திட்டங்களை அமைத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.