கோவை: நூறு சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி கோவையில் மாற்றுத்திறனாளிகள் மேற்கொண்ட விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் தொடங்கி வைத்தார்.
தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் 23ம் தேதி நடைபெற உள்ளது. கோவை மாவட்டத்தைப் பொறுத்தவரை தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பல்வேறு நிகழ்ச்சிகளை மாவட்ட நிர்வாகம் நடத்தி வருகிறது.
Click Here to read news:கோவையில் ஓய்வு பெற்ற தாசில்தாரிடம்ரூ. 45 லட்சம் டிஜிட்டல் மோசடி!
தேர்தல் அறிவிப்பு வெளியானதும், ஏர் பலூனில் பறந்து மாவட்ட ஆட்சியர் வாக்குப்பதிவு விழிப்புணர்வை ஏற்படுத்தினார். மேலும், தேர்தல் உறுதி மொழி ஏற்பு, கல்லூரி மாணவர்களின் ஓவியம் வரைதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

இதனிடையே 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி கோவையில் மாற்றுத்திறனாளிகள் விழிப்புணர்வு வாகன பேரணி மேற்கொண்டனர்.
Click here to read news கோவை அருகே சிறுத்தை பீதி; “20 நாட்களாக நடவடிக்கை எங்கே?” – அண்ணாமலை கடும் விமர்சனம்
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலிருந்து இந்தப் பேரணியை ஆட்சியர் பவன் குமார் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

இந்த விழிப்புணர்வு வாகன பேரணியில் 100க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு, 100 சதவீத வக்குப்பதிவி அவசியம் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியவாறு ஆட்சியில் அலுவலகத்தில் தொடங்கி அவிநாசி சாலை, வஉசி பூங்கா, காந்திபுரம் வழியாகச் சென்று செம்மொழி பூங்கா வரை சென்று பேரணியை நிறைவு செய்தனர்.

