கோவை: கோவையில் இரவு நேரங்களில் மேம்பாலங்கள் மூடப்படுவதால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருவதாக வீடியோவுடன் NCC செய்தி வெளியிட்ட நிலையில், அந்த தடை நீக்கப்பட்டுள்ளது.
கோவை நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், உக்கடம், திருச்சி ரோடு, அவிநாசி ரோடு பகுதிகளில் மேம்பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. அதில் சிலர் இரவு நேரங்களில் அதிவேகமாக பயணிப்பதாக புகார்கள் எழுந்தன.
இதனால் உக்கடம், அவிநாசி சாலை மற்றும் திருச்சி சாலை மேம்பாலங்களில் இரவு நேரங்களில் செல்ல போலீசார் தடை விதித்தனர்.
இரவு 11 மணிக்கு மேல் அனைத்து மேம்பாலங்களிலும் போலீசார் இரும்பு தடுப்புகள் வைத்து மூடுவதாக அறிவித்தனர். ஆனால், சில தினங்களில் திட்டமிட்ட நேரத்திற்கு முன்பே மேம்பாலங்கள் பேரிகார்டுகள் கொண்டு அடைக்கப்பட்டன.
இதனால் கோவையின் பல்வேறு பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. இதனிடையே, News Clouds Coimbatore இந்த பிரச்சனையை மக்கள் பேட்டியுடன் வீடியோ மற்றும் செய்தியாக வெளியிட்டது.
அந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்ட நிலையில், பலரும் அதற்கு ஆதரவாக குரல் எழுப்பினர்.
அந்த வீடியோ காட்சிகள்
இதனிடையே, மேம்பாலங்களில் இரவு நேரத்தில் செல்வதற்கான தடை உத்தரவை நீக்கி, கோவை மாநகர காவல் துணை ஆணையர் (போக்குவரத்து) உத்தரவிட்டுள்ளார்.
இதனால் இரவு நேரங்களில் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவித்த பொதுமக்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டுள்ளனர்.
அதே நேரத்தில், அதிவேகமாகச் செல்வோரைக் கண்காணித்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வாகன ஓட்டிகள் தெரிவித்துள்ளனர்.
மார்ச் 22ம் தேதி வெளியிடப்பட்ட செய்தி
Click Here for: DMK candidates List Coimbatore

