புலியகுளத்தில் குழந்தைக்கு பெயர் சூட்டிய செந்தில் பாலாஜி!

கோவை: அம்மன்குளம் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட செந்தில் பாலாஜி, பொதுமக்களிடம் குறைகளை கேட்டு அறிந்தார். மேலும், அங்கு ஒரு குழந்தைக்கு பெயர் சூட்டினார்.

Advertisement

தமிழக சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. கோவையில் வெயில் தகிக்கும் நிலையிலும் பல்வேறு கட்சி வேட்பாளர்கள் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை தெற்கு தொகுதியில் திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி களமிறங்கியுள்ளார். அவர் தனது தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தினமும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

அதன் ஒரு பகுதியாக இன்று தெற்கு தொகுதிக்குட்பட்ட அம்மன்குளம் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவருக்கு திமுக தொண்டர்கள் மேளதாளம் முழங்க உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து அவர் பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார்.

Advertisement

அப்போது அம்மன்குளம் பகுதியைச் சேர்ந்த நிரஞ்சன் – நந்தியா தம்பதியினர் தங்களது ஆண் குழந்தையை செந்தில் பாலாஜியிடம் கொடுத்து, குழந்தைக்கு பெயர் சூட்டுமாறு கோரிக்கை விடுத்தனர்.

senthil balaji

குழந்தையை கையில் பெற்றுக்கொண்ட செந்தில் பாலாஜி, அக்குழந்தைக்கு “அகில்யாழன்” என்ற பெயரைச் சூட்டினார்.

Advertisement

தொடர்ந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அவர், அனைவரும் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என்றும், திமுக ஆட்சி அமைந்த உடன் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும் என உறுதி அளித்தார்.

Flipkart Link 2
Dev Mithran
Dev Mithran
Dev Mithran has 3 years of experience in the media field and is currently working as a content writer for News Clouds Coimbatore. He covers a wide range of beats including crime, politics, and lifestyle, bringing accurate, engaging, and audience-focused reporting to digital news.

2 COMMENTS

Comments are closed.

Recent News

நம்ம கோவை தான் ‘தென்னிந்தியாவின் மான்செஸ்டர்’… சும்மாவா சொன்னாங்க!

தமிழகத்தில் 2வது பெரிய நகரமாக இருந்தாலும், சிறந்த தொழில் வளர்ச்சியடைந்த மாவட்டமாக கோவை திகழ்கிறது. எனவே, இந்த நகரை தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம், குறிச்சி பகுதியில் செயல்படும்...

Video

அன்னூரில் சிறுத்தை நடமாட்டம்- சிசிடிவி காட்சிகள்…

கோவை: அன்னூர் பகுதியில் தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டுள்ளது. கோவை அருகே நள்ளிரவில் ஊருக்கு அருகில் உள்ள தோட்டம் ஒன்றில் உலா வந்த சிறுத்தையின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கோவை மாவட்டம்,...