Coimbatore Power Cut: கோவையில் ஜூலை 22ம் தேதி மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
மாதாந்திர பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்காக கோவை மாவட்டத்தில் சில பகுதிகளில் மின்தடை செய்யப்படும் என தமிழ்நாடு மின்வாரியம் அறிவித்துள்ளது.
மின்தடை ஏற்படும் பகுதிகள்:
ஆர்.எஸ்.புரம் மின்நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகள்:-
அரோக்கியசாமி சாலை, ராமச்சந்திரா சாலை, டி.பி.சாலை, லாலி சாலை, தடாகம் சாலை, கௌலி ப்ரவுன் சாலை, டி.வி.சாமி சாலை, சுக்கிரவார்பேட்டை, காந்தி பூங்கா, கோபால் லேஅவுட், சாமியார் புதிய வீதி, இடயர் வீதி, ராஜ வீதி ஆகிய பகுதிகளில் மின்தடை அமலாகும்.
சின்ன தடாகம் மின்நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகள்:-
சின்ன தடாகம், ஆனைக்கட்டி, நாஞ்சுண்டாபுரம், பன்னீர் மடை (சில பகுதிகள்), பெரிய தடாகம், பாப்பநாயக்கன் பாளையம் உள்ளிட்ட இடங்களில் மின்தடை ஏற்படும்.
நெகமம் மின்நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகள்:-
காட்டம்பட்டி, ஆர்.சி.புரம், ஜே.கிருஷ்ணாபுரம், நெகமம், வடசித்தூர் ஆகிய பகுதிகளிலும் மின் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படும்.
மின் பராமரிப்பு பணிகளுக்காக காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இந்த மின்தடை அமலாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்குறிப்பிட்ட இடங்களுடன் கூடுதல் இடங்களிலும் மின்தடை ஏற்படலாம். இந்த தகவலை அந்தந்த பகுதி வாழ் மக்களுக்குப் பகிர்ந்து உதவிடுங்கள் வாசகர்களே.
