சேவைக்குக் கிடைத்த விருது; கோவைக்கு பெருமை சேர்த்த RAAC

கோவை: கோவையை மையமாகக் கொண்டு பல்வேறு நலத்திட்டப் பணிகளை மேற்கொண்டு வரும் RAAC அமைப்பிற்கு தேசிய அளவிலான விருது வழங்கப்பட்டுள்ளது.

கோவையில் மக்கள் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்காக RAAC அமைப்பு செயல்பட்டு வருகிறது. பாஷ் (Bosch) மற்றும் தன்னார்வலர்களுடன் இணைந்து காளப்பட்டி அருகே RAAC அமைப்பினர் “நம்ம ஸ்பெஷல் பார்க்”-ஐ நிறுவினர்.

சிறப்பு குழந்தைகளைக் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த பூங்கா, பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இங்கு வரும் குழந்தைகள், ஏட்டுக்கல்வி முறைக்கு பதிலாக, நடைமுறைக் கல்வி அனுபவத்தை பெறுகின்றனர்.

இதனிடையே, நம்ம ஸ்பெஷல் பார்க் அமைத்தமைக்காக, பன்மை (Diversity), சமத்துவம் (Equity), மற்றும் இணைவு (Inclusion) பிரிவில், 5வது சமூக தாக்க மாநாடு & விருதுகள் (SICA’25) நிகழ்வில் RAAC அமைப்பு வெற்றியாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

Advertisement

டில்லியில் உள்ள இந்தியா இன்டர்நேஷனல் சென்டரில் (IIC) நடைபெற்ற நிகழ்வில் RAAC அமைப்பினர் தேசிய விருதைப் பெற்றனர். பல கட்டத் தேர்வுகளுக்குப் பின் கிடைத்த இந்த விருது கோவைக்கு பெருமை சேர்த்துள்ளது.

இதுகுறித்து RAAC பிரதிநிதிகள் கூறுகையில், “இந்த விருது நமது சமூகத்திற்கு உரியது. இது எங்கள் நம்பிக்கைக்கு மேலும் வலுசேர்த்துள்ளது. உறுதுணையாக இருந்த தன்னார்வலர்கள், கோவை மாவட்ட மற்றும் மாநகராட்சி நிர்வாகங்களுக்கு எங்கள் நன்றி” என்றனர்.

Recent News

முதல்வரை சிறையில் அடைக்க வேண்டும்- கோவை கல்லூரி மாணவி விவகாரத்தில் பாமக காட்டம்

கோவை: முதல்வர் ஸ்டாலினை தான் சிறையில் அடைக்க வேண்டும் என்று பாமக திலகபாமா விமர்சித்துள்ளார். கோவையில் கல்லூரி மாணவி கூட்டு வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் குறித்து குற்றவாளிகளுக்கு காவல்துறையினர் உரிய தண்டனை வாங்கி தர...

Video

தடாகம் அருகே ஊருக்குள் புகுந்த காட்டு யானை- அலறி அடித்து ஓடிய மக்கள்- சிசிடிவி காட்சிகள்

கோவை: கோவை தடாகம் அருகே ஊருக்குள் புகுந்த காட்டுயானையை பார்த்து பொதுமக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளான தடாகம்,...
Join WhatsApp