கோவையில் குளக்கரைகளில் சில்மிஷம் – போலீசார் எச்சரிக்கை!

கோவை: கோவையில் உள்ள குளக்கரைகளில் சில்மிஷத்தில் ஈடுபட்ட ஜோடிகளை போலீசார் எச்சரித்து அனுப்பினர்.

Advertisement

கல்வி, தொழில், மருத்துவம் என பல அம்சங்களும் நிறைந்த கோவையில் தற்போது ஐடி துறையும் வேகமாக வளர்ந்து வருகிறது. இதனால் மக்கள் நெருக்கம் நாளுக்கு நாள் அதிகரிட்து வருகிறது.

பெரிய அளவில் இங்கு சுற்றுலாத்தளங்கள் இல்லை என்றாலும், இருக்கும் சில இடங்களை மாவட்ட-மாநகராட்சி நிர்வாகங்கள் மேம்படுத்தியுள்ளன. அதன்படி, குடும்பங்களும், இளைஞர்களும் ஓய்வெடுக்கக் கூடிய சில அமைதியான இடங்களை கோவை கொண்டுள்ளது.

அத்தகைய முக்கிய இடங்களில் ஒன்றாக வாலாங்குளம், பெரியகுளம், உக்கடம் குளக்கரை போன்ற இடங்கள் உள்ளன.

Advertisement

சமீப ஆண்டுகளில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், கோவை நகரின் பல குளங்கள் அழகாக மேம்படுத்தப்பட்டுள்ளன. நடைபாதைகள், அமர்வுக்கான நாற்காலிகள், குழந்தைகளுக்கான விளையாட்டு பூங்காக்கள், விளக்குகள் மற்றும் பாதுகாப்பு கேமராக்கள் என இக்குளக்கரைகளில் வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. இதனால் மாலை நேரங்களில் குடும்பங்கள், மூத்தவர்கள், சிறுவர்கள் என அனைவரும் குளக்கரைகளில் பொழுதைக் கழிக்க வருகின்றனர்.

ஆனால், சமீபத்தில் இவ்விடங்களில் சில இளைஞர்கள் தங்களின் காதலர்களுடன் ஒழுக்கமற்ற முறையில் நடந்து கொள்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

Advertisement

குறிப்பாக உக்கடம் வாலாங்குளம் மற்றும் பெரியகுளம் சுற்றுப்புறங்களில் சில ஜோடிகள் பொதுமக்கள் முன்பாக சில்மிஷத்தில் ஈடுபட்டதாக புகார் செய்யப்பட்டுள்ளது. இதனால் குழந்தைகளுடன் வருபவர்கள் மற்றும் குடும்பங்கள் பெரும் அசௌகரியம் அனுபவித்ததாக கூறப்படுகிறது.

அதனைத் தொடர்ந்து போலீசார் சம்பந்தப்பட்ட பகுதிகளில் சுற்றிப்பார்த்து, சில ஜோடிகளுக்கு எச்சரிக்கை விடுத்து அனுப்பியுள்ளனர். “இது பொதுமக்கள் பயன்படுத்தும் இடம், குடும்பங்கள் வருவார்கள்; ஒழுக்கம் காக்கப்பட வேண்டும்” என்று போலீசார் எச்சரித்ததாக கூறப்படுகிறது.

இந்த குளங்கள் குடும்பத்தோடு அமைதியாகச் செல்லக்கூடிய இடமாக இருக்க வேண்டும். இதுபோன்ற செயல்கள் குழந்தைகளுக்கு தவறான பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்” என்று பொதுமக்கள் தெரிவித்தனர்.

கோவை மாநகராட்சி நிர்வாகம் இதுகுறித்து விழிப்புணர்வு பலகைகள் அமைப்பதோடு, இங்கு போலீசாரும் ரோந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதுப்பிக்கப்பட்ட இத்தளங்கள் அனைவருக்கும் சுத்தமான, பாதுகாப்பான ஓய்வு இடங்களாகவே தொடரவேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பு.

சில்மிஷத்தில் ஈடுபட்ட ஜோடிகளின் முகங்களை அவர்களின் தனியுரிமையை கருத்தில் கொண்டு மறைத்துள்ளோம்.

Amazon Link 1
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

இந்த அரசு கருணை காட்டாது- அமைச்சர் அருண்ராஜ் குறிபிட்ட விஷயம்…

கோவை: உறுப்பு மாற்று சிகிச்சையில் தவறு செய்தால் இந்த அரசு கருணை காட்டாது என நாமக்கல் கிட்னி திருட்டை குறிபிட்டு அமைச்சர் அருண்ராஜ் எச்சரித்துள்ளார். கோவை அவிநாசி சாலையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில்...

Video

தடாகம் அருகே உணவு தேடி வீட்டின் கேட்டை சாதுரியமாக திறந்த காட்டுயானை-வைரல் சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவையில் வீட்டின் கேட்டை லாவகமாக திறந்து உள்ளே சென்று அதே கேட் வழியில் வெளியே வந்த காட்டு யானையின் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் அதிகளவு வனவிலங்குகள்...