கோவையில் பாஜக சார்பில் சிறப்பு நலத்திட்ட முகாம்; ப்ரீத்தி லட்சுமி தொடங்கி வைத்தார்

கோவை; கோவை செங்காளிபாளையம் பகுதியில் பாஜக சார்பில் 10 நாட்கள் நடக்கும் மத்திய அரசின் சிறப்பு நலத்திட்ட முகாம் தொடங்கியது.

மத்திய அரசின் நலத்திட்ட உதவிகளை மக்களிடையே கொண்டு செல்வதற்காக பல்வேறு நடவடிக்கைகளை கோவை மாநகர் மாவட்டம் பெரிய நாயக்கன் பாளையம் கிழக்கு மண்டல் பாஜகவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில், கோவை கவுண்டம்பாளையம் தொகுதிக்குட்பட்ட
காந்தி காலனி மற்றும் செங்காளி பாளையம் பாஜக சார்பில் மத்திய அரசின் சிறப்பு நலத்திட்ட முகாம் செங்காளி பாளையம் பேருந்து நிலையம் அருகே நேற்று தொடங்கியது. 10 நாட்கள் நடக்கும் இந்த முகாமை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மாவட்ட பாஜக பொதுச்செயலாளர் ப்ரீத்தி லட்சுமி தொடங்கி வைத்தார்.

bjp

இந்த முகாமில் ஆதார் பெயர் மற்றும் முகவரி மாற்றம், பிரதம மந்திரியின் உஜ்வாலா யோஜனா இலவச கேஸ் இணைப்பு, பிரதம மந்திரியின் செல்வமகள் திட்டம், அஞ்சல் துறையின் இன்சூரன்ஸ், பிரதம மந்திரியின் அயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீடு, பிரதமரின் ஸ்வாநிதி சாலையோர வியாபாரிகள் கடன் திட்டம், பிரதம மந்திரியின் இ-ஷ்ரம் கார்டு அமைப்பு சாரா தொழிலாளர்கள் மத்திய அரசின் திட்டம் போன்ற சேவைகள் வழங்கப்படுகின்றன.

இதற்கான ஏற்பாடுகளை பாஜக நிர்வாகிகள் கனகராஜ் மற்றும் உதயகுமார் உள்ளிட்ட நிர்வாகிகள் முன்னின்று செய்திருந்தனர்.

Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

Coimbatore Crime News: மக்களே உஷார்… 77 நாட்களில் ரூ.15 கோடி மோசடி!

கோவையில் கடந்த 77 நாட்களில் ஆன்லைன் மோசடியில் மக்கள் ரூ.15 கோடி இழந்ததாக சைபர் கிரைம் போலீசார் அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளனர். Coimbatore Crime News

Video

கோவையில் கார் தீ பிடிப்பு- சாமர்த்தியமாக செயல்பட்ட ஓட்டுநர்…

கோவை சின்னியம்பாளையம் அருகே அவினாசி சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்த நிலையில், ஓட்டுநர் சாமர்த்தியமாக இறங்கியதால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.