கோவையில் பாஜக சார்பில் சிறப்பு நலத்திட்ட முகாம்; ப்ரீத்தி லட்சுமி தொடங்கி வைத்தார்

கோவை; கோவை செங்காளிபாளையம் பகுதியில் பாஜக சார்பில் 10 நாட்கள் நடக்கும் மத்திய அரசின் சிறப்பு நலத்திட்ட முகாம் தொடங்கியது.

Advertisement

மத்திய அரசின் நலத்திட்ட உதவிகளை மக்களிடையே கொண்டு செல்வதற்காக பல்வேறு நடவடிக்கைகளை கோவை மாநகர் மாவட்டம் பெரிய நாயக்கன் பாளையம் கிழக்கு மண்டல் பாஜகவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில், கோவை கவுண்டம்பாளையம் தொகுதிக்குட்பட்ட
காந்தி காலனி மற்றும் செங்காளி பாளையம் பாஜக சார்பில் மத்திய அரசின் சிறப்பு நலத்திட்ட முகாம் செங்காளி பாளையம் பேருந்து நிலையம் அருகே நேற்று தொடங்கியது. 10 நாட்கள் நடக்கும் இந்த முகாமை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மாவட்ட பாஜக பொதுச்செயலாளர் ப்ரீத்தி லட்சுமி தொடங்கி வைத்தார்.

bjp

இந்த முகாமில் ஆதார் பெயர் மற்றும் முகவரி மாற்றம், பிரதம மந்திரியின் உஜ்வாலா யோஜனா இலவச கேஸ் இணைப்பு, பிரதம மந்திரியின் செல்வமகள் திட்டம், அஞ்சல் துறையின் இன்சூரன்ஸ், பிரதம மந்திரியின் அயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீடு, பிரதமரின் ஸ்வாநிதி சாலையோர வியாபாரிகள் கடன் திட்டம், பிரதம மந்திரியின் இ-ஷ்ரம் கார்டு அமைப்பு சாரா தொழிலாளர்கள் மத்திய அரசின் திட்டம் போன்ற சேவைகள் வழங்கப்படுகின்றன.

Advertisement

இதற்கான ஏற்பாடுகளை பாஜக நிர்வாகிகள் கனகராஜ் மற்றும் உதயகுமார் உள்ளிட்ட நிர்வாகிகள் முன்னின்று செய்திருந்தனர்.

Flipkart Link 1
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

நாளை ஆடி அமாவாசை… மறந்தும் கூட வீட்டில் இந்த 15 விஷயங்களை செய்யாதீர்கள்…!

ஆடி அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களை வழிபடும் முறைகள், தர்ப்பணம் செய்யும் நடைமுறைகள் மற்றும் பாரம்பரியமாக வீட்டில் தவிர்க்கப்படும் 15 விஷயங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

Video

கோவையில் செய்த தவறை உணர்ந்த இளம்பெண்- வீடியோ காட்சிகள்…

கோவை காந்திபுரம் செல்போன் கடையில் வாடிக்கையாளர் போல் நடித்து ஐபோன் 13-ஐ திருடிச் சென்ற இளம்பெண், சிசிடிவி காட்சிகள் வைரலானதைத் தொடர்ந்து தனது தவறை ஒப்புக்கொண்டு செல்போனை மீண்டும் கடையில் ஒப்படைத்தார்.