கோவையில் கஞ்சா வழக்கில் கைதான இருவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது…

கோவை: கோவையில் 10 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு ஒடிசாவை சேர்ந்த குற்றவாளிகள் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது.

கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் காவல் நிலைய பகுதியில் கடந்த 10 கிலோ கஞ்சாவை விற்பனைக்கு வைத்து இருந்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பிஷ்ணு சரண் பிரதான் (42) மற்றும் நஹு பிரதான் (34) ஆகியோர்களை தொண்டாமுத்தூர் காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Advertisement

மேலும் பொது ஒழுங்கு மற்றும் பொது சுகாதாரப் பராமரிப்பிற்கு பாதகமான செயலில் ஈடுபட்ட குற்றத்திற்காக பிஷ்ணு சரண் பிரதான் (42) மற்றும் *நஹு பிரதான் (34) மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் பரிந்துரை செய்தார்.

அப்பரிந்துரையின் பேரில் கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் அந்த நபர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தார். அந்த உத்தரவின் அடிப்படையில் கஞ்சா வழக்கு குற்றவாளிகளான இருவர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர்.

Recent News

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றும் விவகாரம்- கோவையில் கைது செய்யப்பட்ட கட்சியினர்…

கோவை: திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவது தொடர்பாக கோவையில் போராட்டத்தில் ஈடுபட முயன்ற இந்து முன்னணி மற்றும் இந்து மக்கள் கட்சியினர் கைது செய்யப்பட்டனர். திருப்பரங்குன்றம் மலை மீது கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பாக நீதிமன்றம்...

Video

Join WhatsApp