கோவை மாநகரில் ஆலங்கட்டி மழை- உற்சாகமடைந்த குழந்தைகள்…

கோவை: கோவை மாநகரில் சரவணம்பட்டி, காளப்பட்டி, சின்னவேடம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்ததால் குழந்தைகளும் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.

தமிழ்நாட்டில் வெயில் வாட்டி வரும் நிலையில் கோவையில் கடந்த சில தினங்களாகவே அதிக அளவிலான வெயில் வாட்டி வருகிறது. இரவு நேரங்களில் சற்று இதமான சூழல் இருந்தாலும் காலை மதியம் ஆகிய நேரங்களில் அதிக அளவிலான வெயில் கோவையில் நிலவி வருகிறது.

இந்நிலையில் இன்று மாலை பல்வேறு பகுதிகளில் மழைப்பொழிவு காணப்பட்டது. சூலூர், கருமத்தம்பட்டி, அன்னூர் ஆகிய பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரம் கனமழை பெய்து வெப்பத்தை தணித்தது. அதேசமயம் கோவை மாநகரிலும் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்தது.

குறிப்பாக சரவணம்பட்டி, காளப்பட்டி, சின்னவேடம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்ததால் குழந்தைகளும் பொதுமக்களும் மகிழ்ச்சியில் ஆழ்ந்தனர். கோவை மாநகரில் ஆலங்கட்டி மழை பெய்து பல மாதங்கள் ஆன நிலையில் இன்று திடீரென பெய்த ஆலங்கட்டி மழை அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. குழந்தைகள் பலரும் ஆலங்கட்டிகளை கையில் எடுத்து விளையாடி மகிழ்ந்தனர்.

கோவையில் திடீரென பெய்த ஆலங்கட்டி மழை மற்றும் கனமழையினால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

மேட்டுப்பாளையம் அருகே 4 லட்சம் பறிமுதல்…

கோவை: மேட்டுப்பாளையம் அருகே ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்பட்ட 4 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. மேட்டுப்பாளையம் அருகே கூடலூர் கவுண்டம்பாளையம் பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய வாகன சோதனையில் உரிய...

Video

தடாகம் பகுதியில் கும்பலாக சுற்றித்திரியும் காட்டுப்பன்றிகள்…

தடாகம் அருகே வரப்பாளையத்தில் இரவு நேரத்தில் ஊருக்குள் புகுந்த காட்டுப்பன்றிகள் கூட்டம் வாழைமரங்கள், விவசாய நிலங்களை சேதப்படுத்திய சிசிடிவி காட்சிகள் வெளியாகின.