ரூ.10 கோடி மதிப்புள்ள சொகுசு பங்களாவை கட்டிய நடிகை மீனாவுக்கு மிகப்பெரிய ஜாக்பாட் அடித்துள்ளது.
கண்ணழகி மீனா
90களில் தமிழ்நாட்டின் ரசிகர்களின் இதயத்தை கவர்ந்த கனவுக்கன்னியாக விளங்கியவர் கண்ணழகி மீனா. தமிழ் மட்டுமல்லாமல், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற பல தென்னிந்திய மொழித் திரைப்படங்களிலும் முன்னணி நடிகையாக திகழ்ந்து தனக்கென ஒரு தனி இடத்தைப் பெற்றார்.
Read news:டி.ஆர்.பி ரேட்டிங்கில் டாப் இடத்தை பிடித்த சீரியல்.. கெத்து காட்டிய விஜய் டிவி!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித், விஜய் போன்ற முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ள மீனா, 2010ஆம் ஆண்டு வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நைனிகா என்ற மகள் உள்ளார். அவர் கூட தெறி போன்ற படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.

ஆனால், கணவர் மறைவுக்குப் பிறகு, தனது மகளுடன் அமைதியான வாழ்க்கையை நடத்தி வரும் மீனாவைச் சுற்றி பல்வேறு வதந்திகளும் சர்ச்சைகளும் எழுந்தன. இருந்தாலும், அவற்றை அனைத்தையும் தன்னம்பிக்கையுடன் எதிர்கொண்டு, தனது வாழ்க்கையை தன்னிச்சையாக முன்னெடுத்து வருகிறார்.
Read news:சிங்கப்பெண்ணே சீரியல் நடிகைக்கு ஒரு நாள் சம்பளம் எத்தனை தெரியுமா? தலையே சுத்துதே!
மீனாவை சுற்றி சர்ச்சைகள்
இந்நிலையில், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு மீனா எடுத்த ஒரு முக்கியமான முடிவு தற்போது அவரை மிகப்பெரிய அளவில் லாபம் அடைய வைத்துள்ளது. சென்னையில் பாரம்பரிய கலை நயத்துடன் ஒரு பிரம்மாண்ட பங்களாவை கட்டியிருந்தார். சுமார் 10 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்ட அந்த வீடு, பெரும்பாலும் கடன் வசதியின் மூலம் கட்டப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

அந்த பங்களாவின் சிறப்பே அதன் கட்டிட வடிவமைப்பு. மரத் தூண்கள், நடுமுற்றம், அரண்மனை பாணி அமைப்பு போன்ற அம்சங்களுடன், பழமையான பாரம்பரிய வீடுகளை நினைவூட்டும் வகையில் மிகுந்த கவனத்துடன் வடிவமைக்கப்பட்டது. சாதாரண வீடாக இல்லாமல், அரிதான கலைப்பணியாக உருவாக்கப்பட்டதால் அதன் மதிப்பு காலப்போக்கில் பல மடங்கு உயர்ந்தது.
மீனாவின் மாஸ்டர் மைண்ட்
இந்த வீட்டின் தனித்துவமும் அழகும் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் கவனத்தையும் ஈர்த்தது. குறிப்பாக அமெரிக்காவை சேர்ந்தவர்கள் இந்த வீட்டை வாங்க ஆர்வம் காட்டி போட்டி போட்டதாக கூறப்படுகிறது. இறுதியில், அந்த வீடு சுமார் 100 கோடி ரூபாய் மதிப்பில் விற்பனையாகியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஒருகாலத்தில் கடனாக எடுத்த 10 கோடி ரூபாய் சுமையாக இருந்தாலும், அதை எதிர்கால முதலீடாக மாற்றிய மீனாவின் தீர்மானம் இன்று அவருக்கு பல மடங்கு லாபத்தை ஈட்டிக் கொடுத்துள்ளது. இதனால், ஒரு திறமையான முதலீட்டாளராகவும், புத்திசாலித்தனமான முடிவுகளை எடுக்கும் நடிகையாகவும் மீனா தற்போது பாராட்டுகளை பெற்றுக் கொண்டு வருகிறார்.

