2 வயது குழந்தைக்கு முதுகெலும்பு தசைநார் சிதைவு நோய் சிகிச்சைக்கு ரூ. 1.50 கோடி- கலெக்டரிடம் பெற்றோர் மனு

கோவை: முதுகெலும்பு தசைநார் சிதைவு நோய்க்கு சிகிச்சை அளிப்பதற்கு 1.50 கோடி செலவாகும் என்பதால் உதவி கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் பெற்றோர் மனு அளித்துள்ளனர்.

Advertisement

கோவை துடியலூர் என்ஜிஜிஓ காலனியை சேர்ந்தவர் அஜய் சில்வெஸ்டர். இவரது மனைவி சரண்யா. ஐ.டி ஊழியர். இந்த தம்பதியின் குழந்தை லியோனல் தாமஸ்(2). இந்த ஆண் குழந்தைக்கு மரபணு குறைபாடு காரணமாக முதுகெலும்பு தசைநார் சிதைவு நோய் ஏற்பட்டது. இதனால் குழந்தையின் வளர்ச்சி பாதிக்கப்பட்டது.

இந்த குழந்தைக்கு ஜீன் தெரபி சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். இதற்கு ஒன்றரை கோடி ரூபாய் செலவாகும் என்பதால் மருத்துவ உதவி கோரி கோவை கலெக்டரிடம் இன்று மனு அளித்தனர்.

அதன் பின்னர் அவர்கள் கூறியதாவது, குழந்தை பிறந்து ஆறு மாதம் கழித்து அதன் வளர்ச்சியில் சில மாற்றங்கள் தெரிந்தது. இதன் பின்பு நாங்கள் பல்வேறு மருத்துவர்களிடம் காண்பித்தோம். குழந்தைக்கு ஒன்றரை வயது ஆகும்போது தான் முதுகெலும்பு தசை நார் சிதைவு நோய் குறைபாடு இருப்பது தெரிய வந்தது.

Advertisement

குழந்தைகள் நேராக உட்கார முடியாது, நடக்க முடியாது. இதனால் சரியாக மூச்சு விட முடியாது. பெங்களூரில் உள்ள ஒரு மருத்துவமனையில் காண்பித்த போது ஜீன் தெரபி சிகிச்சை அளிக்க வேண்டும் என்று கூறினர்.

இதற்கு ரூ. 16 கோடி செலவாகும் என்று தெரிவித்தனர். அதன் பின்னர் வரி விலக்கு போக 8 1/2 கோடி ரூபாய் செலவாகும் என்றனர். அதன் பின்னர் மலேசியாவில் உள்ள ஒரு மருத்துவமனை ரூ. ஒன்றரை கோடிக்கு ஜீன் தெரபி சிகிச்சை அளிப்பதாக தெரிவித்துள்ளனர்.

Advertisement

எனவே எங்களுக்கு இந்த தொகையை ஏற்பாடு செய்ய முடியாததால் அரசு மூலம் நிதி உதவி பெற்றுத்தர ஏற்பாடு செய்ய வேண்டும். தங்களை 7397504777 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Amazon Link 1
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

இந்த அரசு கருணை காட்டாது- அமைச்சர் அருண்ராஜ் குறிபிட்ட விஷயம்…

கோவை: உறுப்பு மாற்று சிகிச்சையில் தவறு செய்தால் இந்த அரசு கருணை காட்டாது என நாமக்கல் கிட்னி திருட்டை குறிபிட்டு அமைச்சர் அருண்ராஜ் எச்சரித்துள்ளார். கோவை அவிநாசி சாலையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில்...

Video

தடாகம் அருகே உணவு தேடி வீட்டின் கேட்டை சாதுரியமாக திறந்த காட்டுயானை-வைரல் சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவையில் வீட்டின் கேட்டை லாவகமாக திறந்து உள்ளே சென்று அதே கேட் வழியில் வெளியே வந்த காட்டு யானையின் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் அதிகளவு வனவிலங்குகள்...