கோவை: உலகை விட்டு உதிர்ந்தது என்று காய்ந்த இலையில் சரோஜாதேவி படத்தை வரைந்து அஞ்சலி செலுத்திய கோவை கலைஞர்…
உலகை விட்டு உதிர்ந்தது என்று காய்ந்த இலையில் சரோஜாதேவி படத்தை வரைந்து அஞ்சலி செலுத்திய கோவை கலைஞர்…
கன்னடன், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நடித்த பழம்பெரும் நடிகையான சரோஜாதேவி வயது மூப்பு காரணமாக இன்று உயிரிழந்தார். அவரது மறைவு திரைத்துறையினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அவரது மறைவிற்கு அரசியல் தலைவர்கள் உட்பட அனைவரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த UMTராஜா எனும் கலைஞர் சரோஜாதேவி மறைவையொட்டி அஞ்சலி செலுத்தும் விதமாக “உலகை விட்டு உதிர்ந்தது” என்று குறிபிட்டு காய்ந்த இலையில் அவரது படத்தை வரைந்து அஞ்சலி செலுத்தி உள்ளார்.