கோவை வருகிறார் புதிய போலீஸ் துணை கமிஷனர்!

கோவை: கோவை மாநகர போலீஸ் துணை கமிஷனர் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

Advertisement

தமிழகம் முழுவதும் 33 ஐ.பி.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, 10 மாவட்டங்களுக்கு புதிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கோவை மாநகர காவல்துறையில் தெற்கு பகுதி துணை ஆணையராக பணியாற்றி வந்தவர் உதயகுமார். இவர் சென்னை அண்ணா நகர் பகுதி உதவி ஆணையராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இவருக்கு பதிலாக கோவை தெற்கு பகுதியின் காவல் துணை ஆணையராக கார்த்திகேயன் நியமிக்கப்பட்டுள்ளார்.

Advertisement

கார்த்திகேயன் தற்போது சென்னை தீவிரவாத தடுப்புப் பிரிவின், காவல் கண்காணிப்பாளராக பணிபுரிந்து வருகிறார்.

அடுத்த ஒரு சில தினங்களில் இவர் கோவை மாநகர காவல் துணை ஆணையராக பொறுப்பேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Flipkart Link 2
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

Video

கோவையில் செய்த தவறை உணர்ந்த இளம்பெண்- வீடியோ காட்சிகள்…

கோவை காந்திபுரம் செல்போன் கடையில் வாடிக்கையாளர் போல் நடித்து ஐபோன் 13-ஐ திருடிச் சென்ற இளம்பெண், சிசிடிவி காட்சிகள் வைரலானதைத் தொடர்ந்து தனது தவறை ஒப்புக்கொண்டு செல்போனை மீண்டும் கடையில் ஒப்படைத்தார்.