கோவையில் 2 கோவில்களில் கொள்ளை; அடுத்தடுத்து துணிகரம்!

கோவை: செல்வபுரத்தில் அடுத்தடுத்து 2 கோவில்களில் கொள்ளை முயற்சி நடந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

செல்வபுரத்தை அடுத்த சொக்கம்புதூரில் மாசாணியம்மன் கோவில் உள்ளது. சம்பவத்தன்று இந்த கோவிலில் பூசாரி வழக்கம் பூஜை செய்துவிட்டு, கோவிலைப் பூட்டிவிட்டு சென்றார்.

மறுநாள் காலை சென்றபோது அங்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது உண்டியல் உடைக்கப்பட்டு சேதம் அடைந்திருந்தது. ஆனால் பணம் கொள்ளை போகவில்லை.

இது குறித்து கோவில் நிர்வாகி செந்தில் குமார் என்பவர் செல்வபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். அதில் நள்ளிரவில் கோவில் பின்புறம் வழியாக உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் மின்சாரத்தை துண்டித்து, உண்டியலில் பணம் கொள்ளையடிக்க முயன்றுள்ளனர்.

ஆனால் முடியாததால் முயற்சியை பாதையில் கைவிட்டு சென்றது தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.

இதேபோல், செல்வபுரம் அரச மர பஸ் ஸ்டாப் அருகே உள்ள மாரியம்மன் கோவிலில் மர்ம நபர்கள் உண்டியலை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து கோயில் நிர்வாகி கதிர்வேல் என்பவர் செல்வபுரம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர்.

செல்வபுரம் சுற்றுவட்டாரத்தில் கோவில்களைக் குறிவைத்து தொடர்ச்சியாக கொள்ளை முயற்சி நடப்பதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

கோவை மாநகரில் ஆலங்கட்டி மழை- உற்சாகமடைந்த குழந்தைகள்…

கோவை: கோவை மாநகரில் சரவணம்பட்டி, காளப்பட்டி, சின்னவேடம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்ததால் குழந்தைகளும் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்தனர். தமிழ்நாட்டில் வெயில் வாட்டி வரும் நிலையில் கோவையில் கடந்த சில தினங்களாகவே அதிக...

Video

தடாகம் பகுதியில் கும்பலாக சுற்றித்திரியும் காட்டுப்பன்றிகள்…

தடாகம் அருகே வரப்பாளையத்தில் இரவு நேரத்தில் ஊருக்குள் புகுந்த காட்டுப்பன்றிகள் கூட்டம் வாழைமரங்கள், விவசாய நிலங்களை சேதப்படுத்திய சிசிடிவி காட்சிகள் வெளியாகின.