கோவை: கோவையில் யுனைடெட் பொறியியல் கல்லூரி மாணவர்கள் 1,445 பேர் இணைந்து ஹார்ன்பில் பறவையின் மனிதச் சங்கம உருவத்தை அமைத்து தேர்தல் விழிப்புணர்வில் சாதனை படைத்தனர்.
கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள யுனைடெட் பொறியியல் கல்லூரியில் தேர்தல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக, தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள ஹார்ன்பில் என்னும் இருவாட்சி பறவையின் உருவத்தை மனிதச் சங்கம வடிவில் அமைத்தனர்.
ரோட்டரேக்ட் கிளப் ஆஃப் யுஐடி ஒருங்கிணைத்த இந்நிகழ்வில் 1,445 மாணவ, மாணவிகள் இணைந்து பங்கேற்றனர். இதனை ஆல் இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் நிறுவனம் அங்கீகரித்து சான்றிதழ் வழங்கியது.
தமிழ்நாட்டில் வரவிருக்கும் ஏப்ரல் 23, 2026 தேர்தலை முன்னிட்டு, வாக்குரிமை குறித்த விழிப்புணர்வை உயர்த்தும் நோக்கில், தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள ஹார்ன்பில் என்னும் இருவாட்சி பறவையை அடையாளமாகக் கொண்டு, கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள யுனைடெட் பொறியியல் கல்லூரியில் “HORNBILL VOTE WAVE 2026” – வாக்குரிமை விழிப்புணர்விற்கான தேசப்பற்று மிக்க பெருங்கூட்டம் என்ற தலைப்பில் மாணவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து அந்தப் பறவையின் உருவத்தை மனிதச் சங்கம வடிவில் அமைத்தனர்.
யுனைடெட் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் மற்றும் தலைவர் பொறியாளர் சண்முகம், இணைத் தலைவர் டாக்டர் மைதிலி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக துணை கலெக்டர் சன்கீத் ஐ.ஏ.எஸ். கலந்து கொண்டு, வாக்குரிமையின் அவசியத்தை வலியுறுத்தி உரையாற்றினார்.
ரோட்டரேக்ட் கிளப் ஆஃப் யுஐடி ஒருங்கிணைத்த இந்நிகழ்வில், 1,445 மாணவ, மாணவிகள் இணைந்து வலிமை, ஒற்றுமை மற்றும் விழிப்புணர்வு ஆகியவற்றின் சின்னமாக விளங்கும் ஹார்ன்பில் பறவையின் உருவத்தை உருவாக்க ஆர்வமுடன் பங்கேற்று, வாக்குரிமையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினர்.
இதனை வெங்கடேசன் தலைமையிலான ஆல் இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் குழுவினரும் பார்வையிட்டு, சாதனையாக அங்கீகரித்து சான்றிதழ் வழங்கினர்.
இந்த நிகழ்வின் மூலக் கருத்து வடிவமைப்பாளராகவும், முழுமையான திட்டமிடலின் பின்னணிச் சக்தியாகவும், மாணவர் நலத்துறை டீன் டாக்டர் ஷர்மிளா செயல்பட்டார்.
இந்நிகழ்வில் ட்ரோன் நிபுணர் வீர விஷ்ணு, ரோட்டேரியன்கள் மற்றும் ரோட்டராக்டர்கள், மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் உள்ளிட்டோர் பார்வையிட்டு, இந்த சாதனையை பாராட்டினர்.
“Hornbill Vote Wave 2026” நிகழ்வு, இளைஞர்களிடையே வாக்குரிமை பற்றிய விழிப்புணர்வை ஊட்டுவதோடு மட்டுமல்லாமல், சமூகப் பொறுப்புணர்வை வலுப்படுத்தும் முன்னோடியான முயற்சியாக திகழ்கிறது. யுஐடி மாணவர்களின் ஒற்றுமை, நாட்டுப்பற்று மற்றும் சமூகப் பொறுப்பு ஆகியவற்றை வெளிப்படுத்திய இந்த நிகழ்வு, கல்வி நிறுவனங்களுக்கு ஒரு முன்னுதாரணமாக விளங்குகிறது.

