கோவை அருகே நடத்தப்பட்ட சோதனையில் கட்டு கட்டாக சிக்கிய பணம்…

கோவை: கோவை இருந்து கேரளா உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட 25.50 லட்சம் ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

Advertisement

தமிழக – கேரளா எல்லையான வேலந்தாவளம் சோதனை சாவடி காவல் துறையின் சோதனை நடத்தி வந்தனர். அப்பொழுது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த நபரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அவர் முன்னுக்குப் , பின் முரணாக பதில் அளித்ததால் சந்தேகம் ஏற்பட்டு தீவிர சோதனை செய்தனர். அதில் இருசக்கர வாகனத்தின் இருக்கைக்கு அடியில் உரிய ஆவணங்கள் இன்றி ரூபாய் 25.50 லட்சம் இருந்தது தெரியவந்தது.

அதனை பறிமுதல் செய்த காவல் துறையினர் நடத்திய விசாரணையில், கேரளா மாநிலம், மலப்புரம் மாவட்டம், மங்காடா பகுதியைச் சேர்ந்த முனீர் (வயது 40) என்பதும் ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். இவரது நண்பர் கேரளா மாநிலம் பெரிந்தல்மண்ணாவைச் சேர்ந்த நிசார் (வயது 40) என்பவரிடம் இருந்து 200 கிராம் தங்கத்தை முனீரிடம் கொடுத்து உள்ளார்.

அதை கோவை உக்கடத்தில் விற்று, அந்தப் பணத்தைக் கேரளாவிற்குக் கொண்டு வருமாறு நிசார் கூறியதாக கூறியுள்ளார். அவரிடம் இருந்து ரூபாய் 25,50,000, இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்த காவல் துறையினர் வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

Advertisement

கோவையில் இருந்து கேரளாவுக்கு உரிய ஆவணங்கள் இன்று கொண்டு சென்ற ரூபாய் 25.50 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Flipkart Link 1
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

ஆடிப்பெருக்கு- பேரூர் படித்துறையை சுத்தம் செய்ய களம் இறங்கிய மாணவர்கள் மற்றும் தன்னார்வலர்கள்…

கோவை: ஆடிப்பெருக்கு தினத்தை முன்னிட்டு பேரூர் படித்துறையை சுத்தம் செய்வதற்கு கல்லூரி மாணவர்கள் மற்றும் தன்னார்வலர்கள் களமிறங்கினர். ஆடிப்பெருக்கு நன்னாள் இன்று கொண்டாடப்படும் நிலையில் நீர் நிலைகளில் பொதுமக்கள் திரண்டு கனிகள் பலகாரங்கள் உணவுகள்...

Video

தடாகம் அருகே உணவு தேடி வீட்டின் கேட்டை சாதுரியமாக திறந்த காட்டுயானை-வைரல் சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவையில் வீட்டின் கேட்டை லாவகமாக திறந்து உள்ளே சென்று அதே கேட் வழியில் வெளியே வந்த காட்டு யானையின் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் அதிகளவு வனவிலங்குகள்...