கோவையில் டீ மாஸ்டருக்கு விபூதி அடித்த போண்டா மாஸ்டர்!

கோவை: கோவையில் ஒரே கடையில் வேலை பார்த்து வந்த டீ மாஸ்டரின் பணத்தை திருடிய போண்டா மாஸ்டரை போலீசார் கைது செய்தனர்.

Advertisement

குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் சந்தோஷ் (வயது 26). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் பேக்கரியில் டீ மாஸ்டராக பணியாற்றி வருகிறார்.

அந்த கடையிலேயே தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த ராவுத்தர் (வயது 45) என்பவர் போண்டா மாஸ்டராக பணியாற்றி வந்தார்.

இருவரும் பேக்கரிக்கு மேலே உள்ள அறையில் ஒன்றாக தங்கி வந்தனர். இதனிடையே சம்பவத்தன்று, சந்தோஷ் தான் சிறுக சிறுக சேமித்து வைத்த 38 ஆயிரம் ரூபாய் பணத்தை தனது கைப்பைக்குள் வைத்து, அதனை தனது அறையில் வைத்து விட்டு வேலைக்கு சென்றார்.

Advertisement

இது போண்டா மாஸ்டர் ராவுத்தருக்கு தெரிந்திருக்கிறது. இதனிடையே கடையிலிருந்து அவசர அவசரமாக ராவுத்தர் தனது அறைக்கு புறப்பட்டார்.

ஆனால் அவர் மீண்டும் கடைக்கு திரும்பவில்லை. இரவு பணியை முடித்துவிட்டு சந்தோஷ் தனது அறைக்குச் சென்றார் அப்போது தனது கைப்பையில் வைத்திருந்த 38 ஆயிரம் ரூபாய் பணம் மாயமாய் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

Advertisement

இது குறித்து குனியமுத்தூர் காவல் நிலையத்தில் சந்தோஷ் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்ததில் அந்த பணத்தை ராவுத்தர் திருடியது தெரியவந்தது.

தொடர்ந்து அவரைத் தேடிப் பிடித்த போலீசார், அவர் திருடியதில் ரூ.10,100 பணத்தை மட்டும் மீட்டனர். மீதி பணத்தை ராவுத்தர் செலவு செய்து ஜாலியாக இருந்தது தெரிய வந்தது.

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், ராவுத்தரை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Amazon Link 2
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

பிறப்புச் சான்றிதழில் பெயரை சேர்ப்பதற்கான கடைசி தேதி அறிவிப்பு…

கோவை: பிறப்புச் சான்றிதழில் பெயரை சேர்ப்பதற்கான கடைசி தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுசுகாதாரம் மற்றும் தடுப்பு மருத்துவத்துறை இயக்குநர் மற்றும் தமிழ்நாடு பிறப்பு, இறப்பு பதிவாளர் தலைமை அலுவலரின் அறிவிப்பின்படி, 01.01.2000-க்கு முன்னும் பின்னும் பதிவு...

Video

தடாகம் அருகே உணவு தேடி வீட்டின் கேட்டை சாதுரியமாக திறந்த காட்டுயானை-வைரல் சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவையில் வீட்டின் கேட்டை லாவகமாக திறந்து உள்ளே சென்று அதே கேட் வழியில் வெளியே வந்த காட்டு யானையின் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் அதிகளவு வனவிலங்குகள்...