கோவை: கோவை செம்மொழி பூங்காவில் ஆய்வு மேற்கொண்டு உடற்பயிற்சி மேற்கொண்டார் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார்.
கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள செம்மொழி பூங்கா தற்பொழுது கோவையின் முக்கியமான பொழுதுபோக்கு இடமாக மாறியுள்ளது. அனைத்து நாட்களிலும் குடும்பங்களுடன் பொதுமக்கள் வருகை புரிந்து செம்மொழி பூங்காவை பார்வையிட்டு செல்கின்றனர். குறிப்பாக வார விடுமுறை தினங்களிலும் விசேஷ நாட்களிலும் மக்கள் கூட்டம் அதிகளவு காணப்படுகிறது.
இங்கு பல்வேறு வகையான செடி கொடிகள், பூச்செடிகள், தமிழர் பாரம்பரியத்தை பறைசாற்றும் கற்சிலைகள் செயற்கை நீரூற்று ஆகியவை உள்ளது. அதுமட்டுமின்றி குழந்தைகளுக்கான விளையாடும் இடம் ஆகியவையும் உள்ளன.
இன்று தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டார். செம்மொழி பூங்காவை சுற்றி பார்வையிட்ட அவர் அங்குள்ள குடிநீர் வசதிகள் நடைபாதை வசதிகள் ஆகியவை குறித்து ஆய்வு செய்தார் மேலும் அங்குள்ள அலுவலர்களிடம் என்னென்ன தேவைகள் தேவைப்படுகிறது என்பது குறித்தும் கேட்டறிந்தார். மேலும் அங்கு உள்ள உடற்பயிற்சி கூடத்திற்கு சென்ற அவர் உடற்பயிற்சி மேற்கொண்டார்.




