இந்த மாதத்தில் மட்டும் 2வது முறை: வெள்ளலூர் குப்பை கிடங்கில் தீ!

கோவை: வெள்ளலூர் குப்பை கிடங்கில் அதிகாலையில் ஏற்பட்ட தீயை சுமார் 2 மணி நேரம் போராடி அணைத்தனர்.

Advertisement

கோவை வெள்ளலூரில் உள்ள குப்பைக்கிடங்கில், மாநகரில் தினமும் சேகரமாகும் 1,100 டன் குப்பை கொட்டப்படுகிறது. இங்கு வெயிலின் தாக்கம் மற்றும் சில சமூகவிரோதிகளின் செயல்களால் அடிக்கடி குப்பை தீப்பற்றி எரிகிறது.

இந்நிலையில், இன்று அதிகாலை 2 மணியளவில் திடீரென குப்பை கிடங்கில் தீ பற்றி எரிந்தது. இதனால் அந்தப் பகுதியில் புகைமூட்டம் ஏற்பட்டது.

இது குறித்து உடனடியாக தீயணைப்பு நிலையங்களுக்கும், மாநகராட்சி துறைக்கும் தகவல் அளிக்கப்பட்டது.

Advertisement

அதன் பேரில், கோவை தெற்கு தீயணைப்பு நிலையங்களில் இருந்து 2 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றன.

சுமார் 20க்கும் மேற்பட்ட தீயணைப்புத்துறையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து குப்பையில் பற்றி எரிந்த தீயை அணைக்க முயன்றனர். கிட்டத்தட்ட 2 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் தீ முற்றிலுமாக அணைக்கப்பட்டது.

Advertisement

இந்த சம்பவம் குறித்து போத்தனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல், கடந்த 16ம் தேதி இரவில் குப்பை கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

Amazon Link 1
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

தமிழ்நாடு பாடத்திட்டம் எப்படி இருக்கும்?- மயில்சாமி அண்ணாதுரை கூறிய தகவல்…

கோவை: அனைத்து போட்டித் தேர்வுகளுக்கும் மாணவர்களை தயார்படுத்தும் வகையில் பாடத்திட்டம் உருவாக்கப்படும் என மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார். கோவை ஸ்ரீ அபிராமி கல்வி நிறுவனங்களின் 15-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. மருத்துவர் பெரியசாமி தலைமையில்...

Video

கோவையில் செய்த தவறை உணர்ந்த இளம்பெண்- வீடியோ காட்சிகள்…

கோவை காந்திபுரம் செல்போன் கடையில் வாடிக்கையாளர் போல் நடித்து ஐபோன் 13-ஐ திருடிச் சென்ற இளம்பெண், சிசிடிவி காட்சிகள் வைரலானதைத் தொடர்ந்து தனது தவறை ஒப்புக்கொண்டு செல்போனை மீண்டும் கடையில் ஒப்படைத்தார்.