கோவை: கோவையில் பட்டப்பகலில் 103 வயது மூதாட்டியிடம் நகை பறிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கவுண்டம்பாளையம் மீனாட்சி நகரை சேர்ந்தவர் ராஜகோபால் (60). இவரது வீட்டில் நேற்று அனைவரும் வெளியே சென்று இருந்தனர்.
அவரது 103 வயது தாயார் மட்டும் வீட்டில் இருந்தார். அப்போது 4 மணியளவில் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர், மூதாட்டியின் கழுத்தில் இருந்த 5 பவுன் தங்க நகையை கழற்றி தப்பி சென்றார்.
சிறிது நேரம் கழித்து வீடு திரும்பிய ராஜகோபாலிடம், அவரது தாயார் மர்ம நபர் வீடு புகுந்து நகை திருடி சென்றதை கூறினார்.
அதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த ராஜகோபால் கவுண்டம்பாளையம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து 103 வயது மூதாட்டியிடம் நகை பறித்த மர்ம நபரை தேடி வருகின்றனர்.
கோவையில் போலீஸ் உயர் அதிகாரிகளுடன் ஏடிஜிபி ஆலோசனை

