கோவைக்கு ரயிலில்கஞ்சா கடத்தி வந்த வடமாநில வாலிபர் கைது

கோவை: கோவைக்கு ரயிலில்
கஞ்சா கடத்தி வந்த வடமாநில வாலிபர் கைது செய்யப்பட்டார்…

கோவைக்கு ரயிலில் கஞ்சா கடத்தி வந்த வடமாநில வாலிபரை போலீசார் கைது
செய்து அவரிடம் இருந்து 4 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Advertisement

கோவை ரயில் நிலையத்தில் ரயில்வே போலீசார், ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் மற்றும் மாநகர மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் அடிக்கடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அப்போது ரயிலில் சட்ட விரோதமாக கஞ்சா, போதை பொருட்கள், மது பாட்டில்கள் கடத்தி வருபவர்களை கைது செய்து வருகின்றனர். அதன் படி நேற்று மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் ரயில் நிலையத்தில் தீவிர சோதனை மேற்கொண்டு இருந்தனர்.

அப்போது 1வது பிளாட்பாரத்தில் சந்தேகப்படும்படி நின்றிருந்த வடமாநில வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர். அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் போலீசார் அவர் வைத்திருந்த பேக்கை சோதனை செய்தனர். அதில் பேக்கில் 4 கிலோ கஞ்சா இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

Advertisement

இதையடுத்து போலீசார் அவரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். விசாரணையில் அவர் ஒரிசா மாநிலத்தைச் சேர்ந்த பத்மா சரன் பிரதான் (29) என்பது தெரிந்தது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து பத்மா சரன் பிரதானை கைது செய்து, சிறையில் அடைத்தனர். அவரிடம் இருந்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Amazon Link 3
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

பிறப்புச் சான்றிதழில் பெயரை சேர்ப்பதற்கான கடைசி தேதி அறிவிப்பு…

கோவை: பிறப்புச் சான்றிதழில் பெயரை சேர்ப்பதற்கான கடைசி தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுசுகாதாரம் மற்றும் தடுப்பு மருத்துவத்துறை இயக்குநர் மற்றும் தமிழ்நாடு பிறப்பு, இறப்பு பதிவாளர் தலைமை அலுவலரின் அறிவிப்பின்படி, 01.01.2000-க்கு முன்னும் பின்னும் பதிவு...

Video

தடாகம் அருகே உணவு தேடி வீட்டின் கேட்டை சாதுரியமாக திறந்த காட்டுயானை-வைரல் சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவையில் வீட்டின் கேட்டை லாவகமாக திறந்து உள்ளே சென்று அதே கேட் வழியில் வெளியே வந்த காட்டு யானையின் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் அதிகளவு வனவிலங்குகள்...