பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன தணிக்கையில் உரிய ஆவணத்துடன் கொண்டு வந்த 70 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல் செய்ததாக மீன் வியாபாரி குற்றம்சாட்டியுள்ளார்.
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில், உரிய ஆவணம் இல்லாமல் கொண்டுவரும் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று இரவு பொள்ளாச்சி பேருந்து நிலையம் முன்பு தேர்தல் பறக்கும் படையினர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு கொண்டு இருந்த போது அந்த வழியாக வந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர்.
அப்போது வாகனத்தில் இருந்தவர்களிடம் இருந்து 70 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல் செய்ததாக கூறப்படுகிறது. ஆனால் அந்த பணத்திற்கான ஆவணங்கள் இருந்ததாகவும், கேரளாவில் மீன்களை விற்று அதற்கான ஆவணங்களை பெற்று அந்த பணத்தை வேளாங்கண்ணிக்கு கொண்டு செல்வதாக தேர்தல் பறக்கும் படையினரிடம் வியாபாரிகள் தெரிவித்தும் பணத்தை பறிமுதல் செய்துள்ளதாக மீன் வியாபாரி குற்றம் சாட்டினார்.

