பெற்றோர்களே, ஆசிரியர்களே… கோவையில் பள்ளி மாணவர்களிடையே நோய்கள் அதிகரிப்பு!

கோவை: கோவையில் பள்ளி மாணவர்களிடையே, தொண்டை நோய்கள் அதிகரித்துள்ளதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

Advertisement

கோவையில் வடகிழக்கு பருவமழை துவங்கியதிலிருந்து காய்ச்சல், தலைவலி, வறண்ட இருமல், தொண்டை வலி, உடல்வலி, சோர்வு போன்ற அறிகுறிகளுடன் வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இதில் பள்ளி மாணவர்கள் அதிகளவில் பாதிப்பு அடைந்து வருகின்றனர்.

இதுகுறித்து மருத்துவர்கள் கூறியதாவது:

பருவநிலைமாற்றம் காரணமாக கோவை மாவட்டத்தில், பொதுமக்கள், குறிப்பாக பள்ளி மாணவர்களிடையே, தொண்டை நோய்கள் அதிகரித்துள்ளது. பள்ளிகளில் மாணவர்கள் நெருக்கமான தொடர்பில் இருப்பதால் அவர்கள் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர்.

Advertisement

மழைக்காலத்திலும், குளிர்காலத்திலும் வெப்பநிலை திடீர் மாற்றம், ஈரப்பதம் அதிகரிப்பதாலும் வைரஸ், கிருமிகள் விரைவாக பரவுகிறது. தண்ணீர் மாசுபாடு முக்கிய காரணமாக இருக்கிறது. மூக்கு மற்றும் தொண்டை வழியே எளிதாக உடலில் புகும் வைரஸ்கள் நேரடியாக தொற்றை ஏற்படுத்துகின்றன.

வறண்ட இருமல், தொண்டை வலி காய்ச்சலையும் ஏற்படுத்தக்கூடும். குறிப்பாக 70 வயதுக்கு மேற்பட்ட நோயெதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் மற்றும் சிறு குழந்தைகள் இந்த தொற்றுக்கு எளிதில் ஆளாகிறார்கள். குழந்தைகள் உடல்நிலை சரியில்லாதபோது பள்ளிக்கு அனுப்புவதை தவிர்க்க வேண்டும்.

Advertisement

பல பெற்றோர் குழந்தைகளுக்கு ஆரம்ப கட்டத்தில் காய்ச்சல், இருமல், தொண்டை வலி இருந்தாலும் பள்ளிக்கு அனுப்புகின்றனர். இது மற்ற குழந்தைகளுக்கும் பரவி தொற்றை ஏற்படுத்தும் அபாயத்தை தருகிறது. காய்ச்சல், இருமல், தொண்டை வலி இருந்தால் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியம்.

இவ்வாறு மருத்துவர்கள் தெரிவித்தனர்.

Amazon Link 1
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

கோவை விமான நிலையத்தில் இ சிகரெட், தங்கம் கைப்பற்றல்…

கோவை: ஏர் அரேபியா விமானத்தில் கோவை வந்த பயணியிடம் தங்கம் மற்றும் மின்னணு சிகரெட் பறிமுதல் செய்யப்பட்டது. கோவை சர்வதேச விமான நிலையத்தில் ஷார்ஜாவில் இருந்து வந்த ஆண் பயணியிடம் இருந்து ரூ.8.76 லட்சம்...

Video

தடாகம் அருகே உணவு தேடி வீட்டின் கேட்டை சாதுரியமாக திறந்த காட்டுயானை-வைரல் சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவையில் வீட்டின் கேட்டை லாவகமாக திறந்து உள்ளே சென்று அதே கேட் வழியில் வெளியே வந்த காட்டு யானையின் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் அதிகளவு வனவிலங்குகள்...