அட்லீ வீட்டு விசேஷத்தில் விஜய் தனியாக பங்கேற்கவில்லை திரிஷா உடன் இருந்திருந்தார் என சொல்லப்படும் நிலையில், தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகும் போட்டோ உண்மை தான் என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் திரையுலகில் பரபரப்பை கிளப்பியுள்ள விஜய்–த்ரிஷா சம்பவம் மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ளது.
சந்தேகத்தை கிளப்பிய ஒரே OUTFIT
நடிகரும் தவெக தலைவருமான விஜய், அவரது மனைவி சங்கீதா, நடிகை திரிஷா ஆகியோரைக் சுற்றி உருவாகியுள்ள இந்த விவாதம், ரசிகர்கள் மத்தியில் தீவிரமான கருத்து வேறுபாடுகளை உருவாக்கியுள்ளது.
Read also கட்டிப்பிடித்து போட்ட போட்டோ.. தலைப்பு செய்தியாக மாறிய திரிஷா!
சமீபத்தில், இயக்குநர் அட்லீ குடும்ப நிகழ்ச்சியில் விஜய் பங்கேற்றிருந்தார். அவர் அணிந்திருந்த நீலநிறச் சட்டை போல த்ரிஷாவும், ஒரே மாதிரியான நீல நிற உடையில் தோன்றிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.

இதற்கு முன் தயாரிப்பாளர் Kalpathi S Aghoram குடும்ப திருமண விழாவிலும் இருவரும் ஒத்த உடை அணிந்து வந்தது நினைவில் இருக்கிறது. இந்த இரண்டு சம்பவங்களும் சேர்ந்து, இது சாதாரண சம்பவமா அல்லது திட்டமிட்ட ஒன்றா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
தற்செயலா? திட்டமிட்டதா?
இந்த விவகாரத்தில் முக்கியமாக பேசப்படுவது, சங்கீதா முன்பு அளித்த கருத்து. த்ரிஷாவின் சமூக வலைதள பதிவுகள் தன்னைக் மனரீதியாக பாதிக்கின்றன என்று அவர் வெளிப்படையாக கூறியிருந்தது பெரும் அதிர்வை ஏற்படுத்தியது.
Click here to read news கோவையில் குப்பை வண்டி வரும்போது விசில் ஊத எதிர்ப்பு!
அந்த கருத்துக்கு பிறகும் இதேபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழ்வது, ரசிகர்கள் மத்தியில் சந்தேகங்களை அதிகரித்துள்ளது.

திரையுலக வட்டாரங்களில், “இது வெறும் தற்செயலா? அல்லது இதற்குப் பின்னால் வேறு காரணமா?” என்ற விவாதம் சூடுபிடித்துள்ளது. சிலர் இதை சாதாரண ஒத்துப்போகும் நிகழ்வாக பார்க்கும் நிலையில், மற்றவர்கள் இது கவன ஈர்ப்புக்காக திட்டமிட்டு செய்யப்படுகிறதா என கேள்வி எழுப்புகின்றனர்.
எதிர்பார்க்கும் ரசிகர்கள்
இதுவரை இந்த விவகாரம் குறித்து விஜய் அல்லது த்ரிஷா யாரும் நேரடியாக விளக்கம் அளிக்கவில்லை. அவர்களின் மௌனம் கூட இந்த சர்ச்சையை மேலும் அதிகரிக்கிறது என கூறப்படுகிறது.
மொத்தத்தில், தனிப்பட்ட வாழ்க்கையுடன் தொடர்புடைய இந்த விவகாரம், தற்போது பொதுவெளியில் பெரிய விவாதமாக மாறியுள்ளது. இதற்கு விரைவில் தெளிவான விளக்கம் வரும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

