கோவை: செல்போன் வாங்குவது போல் நடித்து திருடிச் சென்ற இளைஞரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.
வடவள்ளி பகுதியில் செல்போன் வாங்குவது போல நடித்து, இளைஞர் ஒருவர் செல்போனை திருடிக் கொண்டு தப்பி ஓடிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
கோவை மாநகர் வடவள்ளி பகுதியில் ஆனந்த் மொபைல் என்ற கடை உள்ளது. இந்த கடைக்கு 13 ம் தேதி மொபைல் வாங்க வந்த இளைஞர் ஒருவர், பல்வேறு மொபைல்கள் குறித்து விசாரித்துள்ளார்.
அப்போது திடீரென அந்த இளைஞர் ஒரு செல்போனை தூக்கிக்கொண்டு ஓடியுள்ளார். வெளியில் இருசக்கர வாகனத்தில் தயாராக நின்றிருந்த அவரது நண்பருடன் தப்பி சென்றுள்ளார். இது குறித்து வடவள்ளி காவல் நிலையத்தில் மொபைல் கடை உரிமையாளர் புகார் அளித்துள்ளார்.
கோவையில் இத்தனை அருவிகளா..? கோடை விடுமுறையில் மிஸ் பண்ணிடாதீங்க..
இந்நிலையில் செல்போனை திருடிச் சென்ற இளைஞரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.
இதனிடையே கடை உரிமையாளர் அளித்த புகாரின் பேரில், திருட்டில் ஈடுபட்டு தப்பியோடிய நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

