கோவையில் 10 கிலோ கஞ்சா பறிமுதல்- 2 பேர் கைது

கோவையில் 10 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் 2 பேர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்.

கோவை மாவட்டத்தில் போதைப் பொருள் விற்பனையை முற்றிலும் தடுத்து, போதைப் பொருள் இல்லாத சமூகத்தை உருவாக்கும் நோக்கில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் தலைமையிலும், நேரடி மேற்பார்வையிலும் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வரப்படுகின்றன.

Advertisement

இந்நிலையில் பேரூர் மற்றும் கோவில்பாளையம் காவல் நிலையங்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் அதிரடி சோதனை மேற்கொள்ளப்பட்டது.

இந்த சோதனையின் போது, பேரூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில், சட்ட விரோதமாக கஞ்சாவை விற்பனைக்காக வைத்து இருந்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த சிரன்ஜிப் ஜெனா @ முன்னா (வயது 28)* என்பவரிடம் இருந்து 5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

Advertisement

இதேபோன்று கோவில்பாளையம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் சித்தார்த் @ புலு சுனா (வயது 31) என்பவரிடம் இருந்து மேலும் 5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
10 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த காவல் துறையினர், இருவரும் மீதும் வழக்குப் பதிவு செய்து கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

இத்தகைய சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

Amazon Link 1
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

விநாயகர் சதுர்த்தி- கோவையில் 10 லட்சம் ரூபாய் நோட்டுகளால் அலங்காரம்

கோவை: விநாயகர் சதுர்த்தி விழாவை ஒட்டி நரசிம்மநாயக்கன்பாளையம் அருள்மிகு வரசித்தி விநாயகர் ஆலயத்தில் விநாயகருக்கு10 லட்சம் ரூபாயைக் கொண்டு அலங்காரம் செய்து வழிபாடு செய்யப்பட்டது. விநாயகர் சதுர்த்தியை ஒட்டி கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் அருள்மிகு வரசித்தி...

Video

தடாகத்தில் மீண்டும் வேட்டையன்- மக்கள் அச்சம்…

கோவை: தடாகம் நஞ்சுண்டாபுரம்மீண்டும் வலம் வந்த வேட்டையன்காட்டுயானையால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கோவை தடாகம் நஞ்சுண்டாபுரம் பகுதியில் நள்ளிரவில் உணவு தேடி குடியிருப்பு பகுதிக்குள் வலம் வந்த வேட்டையன் என்ற ஒற்றை காட்டு யானை செடி,...