கோவை திமுக ஆர்ப்பாட்டத்தில் பாகிஸ்தான் கொடியா?

கோவை: கோவையில் நடைபெற்ற திமுக ஆர்ப்பாட்டத்தில் பாகிஸ்தான் கொடி பறந்ததாக சில வதந்தியை கிளப்பியுள்ளனர்.

Advertisement

வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த நடவடிக்கைக்கு எதிராக திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளான் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், மதிமுக, விசிக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் உள்ளிட்ட கட்சியினர் கோவையில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

டாடாபாத் பகுதியில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் மேற்கு மண்டல திமுக பொறுப்பாளரும், முன்னாள் அமைச்சருமான செந்தில் பாலாஜி தலைமையேற்றார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக மாவட்ட செயலாளர்கள் துரை.செந்தமிழ்ச் செல்வன், தொண்டாமுத்தூர் ரவி, தளபதி முருகேசன், முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி, கொ.ம.தே.க. பொதுச்செயலாளர் ஈஸ்வரன், ஆதிதமிழர் பேரவை இரா.அதியமான், நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ப. ராஜ்குமார், கூட்டணி கட்சி கோவை மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Advertisement

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வந்திருந்த கூட்டணிக் கட்சியினர் தங்களது கைகளில் அவரவர் சார்ந்த கட்சிக் கொடிகளைப் பிடித்தவாறு நின்றிருந்தனர்.

DMK protest in Coimbatore with flags misidentified as Pakistan flag

அப்போது கூட்டத்தில் பாகிஸ்தான் கொடி பறப்பதாக சிலர் சமூக வலைதளங்கள் மூலம் வதந்தி பரப்பத் தொடங்கினர்.

Advertisement

ஆனால், உண்மையில் அது பாகிஸ்தான் கொடியல்ல. அந்த கொடி இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்குச் சொந்தமான கொடி. இதனை பலரும் பகிர்ந்து வதந்தி பரப்பியவர்களை விளாசி வருகின்றனர்.

Amazon Link 2
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

இந்த அரசு கருணை காட்டாது- அமைச்சர் அருண்ராஜ் குறிபிட்ட விஷயம்…

கோவை: உறுப்பு மாற்று சிகிச்சையில் தவறு செய்தால் இந்த அரசு கருணை காட்டாது என நாமக்கல் கிட்னி திருட்டை குறிபிட்டு அமைச்சர் அருண்ராஜ் எச்சரித்துள்ளார். கோவை அவிநாசி சாலையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில்...

Video

தடாகம் அருகே உணவு தேடி வீட்டின் கேட்டை சாதுரியமாக திறந்த காட்டுயானை-வைரல் சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவையில் வீட்டின் கேட்டை லாவகமாக திறந்து உள்ளே சென்று அதே கேட் வழியில் வெளியே வந்த காட்டு யானையின் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் அதிகளவு வனவிலங்குகள்...