ஜொலிக்கும் கோவை செம்மொழிப் பூங்கா… வீடியோ காட்சிகள்!

கோவை: கோவை செம்மொழிப் பூங்காவை நாளை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைக்கும் நிலையில், மின்னொளி அலங்காரத்தில் செம்மொழிப் பூங்கா ஜொலிக்கிறது.

Advertisement

காந்திபுரத்தில் ரூ.208.5 கோடி செலவில், 45 ஏக்கர் பரப்பளவில் செம்மொழி பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.

இது ஒரு நவீன மற்றும் கலாச்சார அடையாள பூங்காவாக உருவாக்கப்பட்டுள்ளது. செம்மொழி பூங்காவில் பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் மற்றும் குடும்பங்கள் அனைவரும் பயன்படுத்தும் வகையில் பன்முக வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன .

மேலும், மூலிகைத் தோட்டங்கள், நீரூற்றுகள், மலைக் குன்றுகள், உணவகங்கள், படிப்பகங்கள், குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான விளையாட்டுப் பகுதிகள் போன்ற பல்வேறு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.

Advertisement

இத்துடன், நடைபாதைகள், அமர்விடங்கள், பார்வையாளர்கள் ஓய்வு எடுக்க இடங்கள், பசுமை நிலப்பரப்புகள் ஆகியவை அனைத்தும் சுற்றுச்சூழல் புதுப்பிப்பு நோக்கத்தோடு வடிவமைக்கப்பட்டு உள்ளன.

இந்த பூங்காவை நாளை காலை 11 மணிக்கு ஸ்டாலின் திறந்து வைக்கிறார். இதனை முன்னிட்டு மின் விளக்குகளால் பூங்கா வளாகம் அழகுபடுத்தப்பட்டு பிரம்மாண்டமாகக் காட்சியளிக்கிறது.

Advertisement

Flipkart Link 1
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

Video

கோவையில் செய்த தவறை உணர்ந்த இளம்பெண்- வீடியோ காட்சிகள்…

கோவை காந்திபுரம் செல்போன் கடையில் வாடிக்கையாளர் போல் நடித்து ஐபோன் 13-ஐ திருடிச் சென்ற இளம்பெண், சிசிடிவி காட்சிகள் வைரலானதைத் தொடர்ந்து தனது தவறை ஒப்புக்கொண்டு செல்போனை மீண்டும் கடையில் ஒப்படைத்தார்.