தேசிய அறிவியல் தினம்- தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் போட்டிகள்- ஆர்வமுடன் பங்கேற்ற பள்ளி மாணவர்கள்…

கோவை: தேசிய அறிவியல் தின விழாவையொட்டி வேளாண் பல்கலையில் பள்ளி மாணவர்களுக்கான அறிவியல் போட்டிகள் நடைபெற்றது.

Advertisement

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் உள்ள தாவர மூலக்கூறு மற்றும் உயிரித்தொழில்நுட்ப மையம் (CPMB&B) மற்றும் உயிரித்தொழில்நுட்ப மகத்துவ மையம் (COXBIT) இணைந்து தேசிய அறிவியல் தினத்தை கொண்டாடும் வகையில் உயிரித்தொழில்நுட்ப மகத்துவ மைய வளாகத்தில் பள்ளி மாணவர்களுக்கான அறிவியல் போட்டிகள் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

இந்நிகழ்வானது, பள்ளி மாணவர்களிடையே அறிவியல் விழிப்புணர்வை வளர்ப்பளதயும், ஆர்வந்தை ஊக்குவிப்பதை மையமாக கொண்டு நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கோயம்புத்தூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பல்வேறு அரசு மற்றும் தனியார் என மொத்தம் 16 பள்ளிகளைச் சேர்ந்த 390 மாணவர்கள் அவர்களின் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோருடன் பங்கேற்றனர்.

சர் சி.வி.ராமன் அவர்களால் ராமன் விளைவு கண்டுபிடிக்கப்பட்டதை நினைவுகோரும் தேசிய அறிவியல் தினத்தின் முக்கியத்துவத்தையும், இளம் தலைமுறையினரிடையே அறிவியல் மனப்பான்மையை வளர்ப்பதன் அவசியத்தையும் இது எடுத்துரைக்கும் விதமாக அமைந்தது.

Advertisement

கட்டுரைப் போட்டி, வினாடி-வினாப் போட்டி, Canvas Painting மற்றும் மலர் அலங்காரம் போன்ற நிகழ்வுகள் இதில் இடம்பெற்றன.

Flipkart Link 2
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

Video

அன்னூரில் சிறுத்தை நடமாட்டம்- சிசிடிவி காட்சிகள்…

கோவை: அன்னூர் பகுதியில் தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டுள்ளது. கோவை அருகே நள்ளிரவில் ஊருக்கு அருகில் உள்ள தோட்டம் ஒன்றில் உலா வந்த சிறுத்தையின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கோவை மாவட்டம்,...