கோவையில் அரசு பள்ளியில் முதல்வர் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது…

கோவை: கோவையில் அரசு பள்ளியில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா பள்ளி குழந்தைகளுடன் கொண்டாடப்பட்டது.

Advertisement

கோவை வெள்ளக்கிணர் அரசு ஆரம்பப்பள்ளியில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் 73 வது பிறந்தநாளை ஒட்டி திமுக 2 வது வட்டம் துடியலூர் கிழக்கு பகுதி சார்பில் கேக் வெட்டி பள்ளிக் குழந்தைகளுக்கு வழங்கி சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலினுக்கு பள்ளி குழந்தைகள் பிறந்தநாள் வாழ்த்து பாடல் பாடி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு க ஸ்டாலினின் 73 வது பிறந்தநாளை திமுகவினர் பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக திமுக 2 வது வட்டம் துடியலூர் கிழக்கு பகுதி சார்பில் கோவை வெள்ளக்கிணர் அரசு ஆரம்பப்பள்ளியில் மு க ஸ்டாலின் பிறந்தநாள் விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது.

கிழக்கு பகுதி கழக செயலாளர் அருள்குமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு மாநகராட்சி 2 வது வார்டு மாமன்ற உறுப்பினர் புஷ்பமணி அருள்குமார், 2 வது வட்டம் ஆ செயலாளர் சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

Advertisement

இந்நிகழ்ச்சியில் சுமார் 10 கிலோ எடையுள்ள மு க ஸ்டாலின் உருவம் பொறித்த கேக்க்கினை பள்ளிக் குழந்தைகளுடன் இணைந்து வெட்டி அதனை குழந்தைகளுக்கு ஊட்டினர். மேலும் பள்ளியில் பயிலும் 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கும் வழங்கினர்.

Flipkart Link 1
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

பள்ளி முடிந்து வீடு திரும்பாத மாணவி- ஒரு மணி நேரத்தில் கண்டுபிடித்த கோவை காவல்துறை…

கோவை: கோவையில் பள்ளி முடிந்து வீடு திரும்பாமல் காணாமல் போன மாணவியை ஒரு மணி நேரத்தில் மீட்ட காவல்துறைக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள கண்ணம்பாளையம் பகுதியில் காணாமல்...

Video

தடாகம் அருகே உணவு தேடி வீட்டின் கேட்டை சாதுரியமாக திறந்த காட்டுயானை-வைரல் சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவையில் வீட்டின் கேட்டை லாவகமாக திறந்து உள்ளே சென்று அதே கேட் வழியில் வெளியே வந்த காட்டு யானையின் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் அதிகளவு வனவிலங்குகள்...