வெள்ளியங்கிரி மலையில் பக்தருக்கு நேர்ந்த சோகம்…

கோவை: வெள்ளியங்கிரி மலையேறிய பக்தர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

கோவை வனக் கோட்டம்,போளுவாம்பட்டி வனச்சரகம், வெள்ளியங்கிரி ஆண்டவர் மலை கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். 7 மலைகள் ஏறி சென்று சிவனை வழிபட்டு வருகின்றனர்.

மலையேற்றம் என்பதால் வனத்துறையினர், காவல்துறையினர் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் மருத்துவ குழுவினரும் பக்தர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு தயார் நிலையில் உள்ளனர்.

அதே சமயம் மலையேற்றத்தின் போது சிலர் உடல் நிலை சரியில்லாமல் மயங்கி விழுந்து உயிரிழக்கும் சம்பவங்களும் நிகழ்கிறது.

Advertisement

மலையேற்றம் தொடங்கியது முதல் ஒரு இளைஞர் மற்றும் ஒரு முதியவர் என்று இருவர் வெள்ளியங்கிரி மலையில் உயிரிழந்துள்ள நிலையில், தற்போது மூன்றாவது நபரும் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவையைச் சேர்ந்த பக்தர் ஹரிதாஸ் என்பவர் முதல் மலைக்கு செல்லும் வழியில் குரங்கு பாலம் அருகில் சுயநினைவின்றி இருப்பதாக நேற்றிரவு சுமார் 11.30 மணி அளவில் வனத்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

Advertisement

தகவலின் அடிப்படையில் வனப்பணியாளர்கள் மற்றும் டோலி தூக்கும் சுமைப் பணியாளர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று சுயநினைவின்றி இருந்த ஹரிதாஸை மீட்டு பூண்டி அடிவாரத்திற்கு வந்துள்ளனர். அவரை பரிசோதித்த மருத்துவர்குழுவினர் அவர் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அவரது உறவினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இது குறித்து ஆலாந்துறை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் பக்தர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Amazon Link 2
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

ஆடி 3வது வெள்ளி ஸ்பெஷல்… இறந்த சுமங்கலி வழிபாடு… அதுவும் இந்த நிற ஆடையில்…. வாழ்க்கையே மாறிப்போகும்!

ஆடி மாதம் எப்போதுமே அம்மனுக்கு மிகவும் உகந்த விரத நாட்களாகும். இந்த மாதங்களில் வரும் வெள்ளிக்கிழமைகளில் அதிகாலை விரதம் இருந்து வழிபாடு நடத்தினால், நமக்கும், நமது குடும்பத்திற்கும் ஏற்பட்ட எப்படிபட்ட துன்பமும் தீர்ந்து...

Video

தடாகம் அருகே உணவு தேடி வீட்டின் கேட்டை சாதுரியமாக திறந்த காட்டுயானை-வைரல் சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவையில் வீட்டின் கேட்டை லாவகமாக திறந்து உள்ளே சென்று அதே கேட் வழியில் வெளியே வந்த காட்டு யானையின் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் அதிகளவு வனவிலங்குகள்...