கோவையில் ஓட்டல் உணவுகளின் விலை தாறுமாறாக உயர்வு…!

கோவை: கோவையில் வணிக சிலிண்டர் தட்டுப்பாடு மற்றும் செலவு அதிகரிப்பு காரணமாக ஓட்டல்களில் உணவுகளின் விலை உயர்ந்துள்ளது. இதனால் விற்பனை பாதிக்கப்பட்டு, ஓட்டல் உரிமையாளர்கள் கடும் கவலையில் உள்ளனர்.

Advertisement

கோவை மாவட்டத்தில் 5 ஆயிரம் பெரிய ஓட்டல்கள், 25 ஆயிரம் சிறிய உணவு விற்பனை கடைகள், 50 ஆயிரம் டீக்கடைகள் மற்றும் பேக்கரிகள் உள்ளன. இங்கு தினமும் கோடிக்கணக்கில் வியாபாரம் நடைபெறும்.
இந்த நிலையில் தற்போது ஓட்டல்களில் உணவு விலை கடந்த 12ம் தேதி முதல் உயர்ந்துவிட்டது. தோசை, சப்பாத்தி, பொங்கல், உப்புமா, பூரி, போன்றவற்றின் விலை 5 ரூபாய் முதல் 10 ரூபாய் வரை உயர்ந்து விட்டது.

இதற்கு ஈரான் அமெரிக்கா இஸ்ரேல் போர் காரணம் என்றும், இந்தியாவிற்கு வரவேண்டிய கச்சா எண்ணெய் மற்றும் கியாஸ் தட்டுப்பாடு காரணமாக கடைகளுக்கு விநியோகிக்கப்படும் சிலிண்டர் விநியோகம் பாதிப்பு என காரணம் கூறப்படுகிறது.

வழக்கமாக கடைகளுக்கு வணிக சிலிண்டர்கள் புக்கிங் செய்த மறுநாள் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. தற்போது வணிக சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அதை புக்கிங் செய்த பிறகு பல நாட்கள் தாமதம் ஆகிறது.

Advertisement

இந்த தட்டுப்பாட்டால் சிலிண்டர் விளையும் உயர்ந்துவிட்டது. இதை சமாளிக்க ஓட்டல் உரிமையாளர்கள் விலையை உயர்த்தும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனால் உணவு பொருள் விலை அதிகரித்து உள்ளது.

உணவுப் பொருள் விற்பனை விலை அதிகரிப்பால் பொதுமக்கள் கடைகளுக்கு சென்று சாப்பிடுவதை குறைத்து விட்டனர். வெளியில் சென்று வேலை பார்ப்பவர்கள் முன்பு ஓட தினமும் உணவு அருந்தி வந்தனர். தற்போது விலை உயர்ந்து விட்டதால் ஓட்டலுக்கு சென்று சாப்பிடுவதை குறைத்து விட்டனர்.

Advertisement

இதனால் ஓட்டல் உரிமையாளர்கள் விற்பனை பாதிக்கப்பட்டுள்ளது. சிலிண்டர் விலையை சமாளிக்க உணவுப் பொருள் விலையை கூட்டிய ஓட்டல் உரிமையாளர்கள் விற்பனை பாதிப்பால் தொழிலாளர்களுக்கு ஊதியம் கொடுப்பதில் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். செலவு அதிகரிப்பதால் ஊழியர்களை குறைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

Amazon Link 1
Dev Mithran
Dev Mithran
Dev Mithran has 3 years of experience in the media field and is currently working as a content writer for News Clouds Coimbatore. He covers a wide range of beats including crime, politics, and lifestyle, bringing accurate, engaging, and audience-focused reporting to digital news.

Recent News

ஆடி 3வது வெள்ளி ஸ்பெஷல்… இறந்த சுமங்கலி வழிபாடு… அதுவும் இந்த நிற ஆடையில்…. வாழ்க்கையே மாறிப்போகும்!

ஆடி மாதம் எப்போதுமே அம்மனுக்கு மிகவும் உகந்த விரத நாட்களாகும். இந்த மாதங்களில் வரும் வெள்ளிக்கிழமைகளில் அதிகாலை விரதம் இருந்து வழிபாடு நடத்தினால், நமக்கும், நமது குடும்பத்திற்கும் ஏற்பட்ட எப்படிபட்ட துன்பமும் தீர்ந்து...

Video

தடாகம் அருகே உணவு தேடி வீட்டின் கேட்டை சாதுரியமாக திறந்த காட்டுயானை-வைரல் சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவையில் வீட்டின் கேட்டை லாவகமாக திறந்து உள்ளே சென்று அதே கேட் வழியில் வெளியே வந்த காட்டு யானையின் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் அதிகளவு வனவிலங்குகள்...